பிரபல தனியார் தொலைக்காட்சியில் காமெடி ஷோவில் போட்டியாளராக வந்து தன்னை தாழ்த்தி அனைவரையும் சிரிக்க வைத்து பிரபலமானவர் தான் சின்னத்திரை பாலா. ஆரம்பத்தில் பல நிகழ்ச்சிகளில் வந்து 10 நிமிடங்கள் தனது காமெடியால் அனைவரையும் சிரிக்க வைத்து விட்டு பணத்தை பெற்று சென்று விடுவார்.
ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் இவர் இருந்தாலும் சட்டை வாங்க காசு இல்லாமல் மிகவும் பழைய ஆடைகளை உடுத்தி கொண்டு செல்வாராம். இவரை கவனித்த அந்த தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அவருக்கு தைரியம் கூறி அவருக்கு சர்ப்ரைஸாக ஒரு பெட்டி முழுவதும் ட்ரெஸ் மற்றும் ஷுக்களை வாங்கி கொடுத்தாராம். அவர் யாரும் இல்லை தொகுப்பாளர் மகாபா ஆனந்த் தான். இதனை பலமுறை பாலா மேடையில் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து தனக்கு வரும் சம்பளங்களில் ஒரு பகுதி பணத்தை ஏழைகளுக்கு செலவு செய்ய முடிவு எடுத்த பாலா, தனது இன்ஸ்ட்டா மூலம் உதவி என வருபவர்களை தேர்வு செய்து, உதவி செய்ய ஆரம்பித்தவர் இன்று பல குடும்பங்களில் உதவி செய்யும் நம்பிக்கை நாயகனாக மாறியுள்ளார். இதனை அடுத்து இவர் மக்களுக்கு செய்து வரும் உதவிகளை பார்த்த ராகவா லாரன்ஸ் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் என்னிடம் கேள் என தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார்.
இதையும் படிங்க: அஜித்தால் இல்லை எங்கள் பாடலால் தான் படம் ஹிட்..! இளையராஜாவுக்கு ஆதரவாக பேசிய கங்கை அமரன்..!

இதனை தொடர்ந்து, இருவரும் சேர்ந்து, ஆம்புலன் வாங்கி கொடுப்பது, லேப்டாப் வாங்கி கொடுப்பது, கடை வைத்து கொடுப்பது, குடிநீர் வசதி செய்து கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, படிப்புக்கு ஃபீஸ் கட்டுவது, வீடு கட்டி தருவது, மருத்துவ உதவிகள் செய்வது என பல உதவிகளை செய்து மக்கள் மனதில் லாரன்சும் பாலாவும் நீங்கா இடம்பிடித்து உள்ளனர்.
இவர்களை பார்க்கும் பொழுது மக்கள் மனதில் நினைவுக்கு வருபவர் மறைந்த நடிகர் விஜயகாந்த் தான் என பலர் கூறுகின்றனர். அவர் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும்பொழுது "என்னடா காசு காசு, செத்தா அர்னா கொடிய கூட எடுத்துட்டு தான் புதைப்பாங்க இருக்குற வரைக்கு நாலுபேருக்கு நல்லது செஞ்சிட்டு போங்கய்யா" என்றார். அதுபோல தான் இன்று இவர்கள் இருக்கின்றனர் என பல மக்கள் கூறிவருகின்றனர்.

இப்படி இருக்க, மக்களுக்கு இவ்வளவு உதவிகளை செய்து வரும் பாலாவை எப்படியாவது ஒரு படத்தில் நடிகராக நடிக்க வைத்து அழகுபார்க்க வேண்டும் என நினைத்த ராகவா லாரன்ஸ், அவரை வைத்து படத்தை தயாரிக்க நல்ல தயாரிப்பாளரை தேடி வந்துள்ளார். தற்பொழுது அதற்க்கான தயாரிப்பாளர் கிடைக்க, தற்பொழுது பாலா கதாநாயகனாக களமிறங்கி உள்ளார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஷெரிப் இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையில், நடிகர் பாலா கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் "BALA#01". இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் வெளியிட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, காமெடி நடிகர் பாலா சமீபத்தில் முதுகு தண்டுவடம் பாதித்த பெண்ணுக்கு தேவையான ஆப்ரேஷன் உதவிகளை செய்து உள்ளார். பின் அந்த பெண்ணை சந்திக்க அவரது வீட்டிற்கே சென்ற பாலா அவரது வீட்டின் நிலைமையை கண்டு, பொறுங்கள் இன்னும் சிறிது நாளில் அண்ணன் புது வீடு கட்டி தருகிறேன் என கூறிச்சென்றார். இந்த விடியோவானது பலரது கவனத்தையும் தற்பொழுது அதிகமாக ஈர்த்து வருகிறது. இதனை பார்த்த சிலர் இப்படி செய்வது எல்லாம் ஃபேமஸ் ஆவதற்காக தான் என கூறிவருகின்றனர்.

இதனை பார்த்து வேதனை அடைந்த பாலாவின் நண்பரும் பிக்பாஸ் பிரபலமான அமுதவாணன், இப்படி பேசுபவர்களுக்கு தகுந்த விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், பாலாவை உங்களுக்கு இப்பொழுது தான் தெரியும். ஆனால் அவர் இப்போது மட்டுமல்ல எப்போதும் என்னுடன் தான் அதிக நேரம் இருக்கிறார். மற்றவர்கள் உதவி செய்ய தயங்கும் போது ஒருவன் உதவி செய்வதை பாராட்டாமல் இருந்தால் கூட பரவாயில்லை இப்படி கிண்டல் செய்து பேசுவது சரியாக இருக்காது.
இப்படி பாலா செய்யும் உதவிகளை விளம்பரத்திற்காக தான் செய்கிறான் என ஏன் சொல்ல வேண்டும். ஏன் அரசியல்வாதி, முதல்வர் அல்லது எம்எல்ஏக்கள் அனைவரும் விளம்பரத்திற்காக கூட தனது பணத்தை கொடுத்து உதவுகிறார்கள். உண்மையில் அவர்கள் விளம்பரத்திற்காக செய்தால் என்ன...அதுவும் காசு தானே என காட்டமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வரதட்சணை வாங்கினேனா.. நானா.. நெவர்..! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா பாண்டியன்..!