டிராகன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மக்களின் ஆசிர்வாதத்தால் தற்பொழுது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் "STR 49" திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் கயாடு லோஹர் என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு கயாடு லோஹர் மீது ரசிகர்கள் தங்களது அன்பை காண்பித்து வருகின்றனர். இவர் மீது அன்புகாட்ட அவரது நடிப்பில் வந்த டிராகன் படம் மட்டும் அல்ல, அப்படத்திற்கு பின் வாரம் ஒருமுறை அவர் தவறாமல் இணையத்தில் பதிவிடும் வார்த்தைகளும் காரணம்.

இப்படி டிராகன் திரைப்படத்தின் மூலம் இன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் கயாடு லோஹர். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள டெஸ்பூர் என்ற நகரத்தைச் சேர்ந்தவர். அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம் படிப்பை முடித்த பின், முதலில் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டவர் படிப்பை முடித்த பின் மாடலிங் பக்கம் செல்ல விருப்பப்பட்டார்.
இதையும் படிங்க: Kayadu Lohar: மேக்கப் போடாமல் கூட இம்புட்டு அழகா? கயாடு லோஹர் கியூட் போட்டோஸ்!

இதனால் முறையாக மாடலிங்கில் கவனம் செலுத்தி பல மேடைகளை கண்ட கயாடு-க்கு அதன் மூலம் நல்ல அடையாளமும் கிடைத்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் `Everyuth Fresh Face' என்ற நிகழ்ச்சியின் 12-வது சீசனின் டைட்டிலையும் வென்றிருக்கிறார். அவ்வளவு தான் அதன் பிறகு இவரது முகத்தை பார்த்த இயக்குநர்கள் இவரை வைத்து படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

இதனை அடுத்து, 2021-ம் ஆண்டு 'முகில்பேடே' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் கயாடு. இத்திரைப்படத்தை தொடர்ந்து அந்த ஆண்டிலேயே மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பித்தார்.

இதனை அடுத்து இவர் நடித்த டிராகன் படம் இவரை மக்களுக்கு அடையாளம் காட்டியது. மேலும், தற்பொழுது 'இதயமுரளி' படத்திலும் நடித்து வரும் கயாடு, தான் எடுக்கும் "டயட் டிப்ஸ்" குறித்து விளக்கமாக பதிவிட்டு அனைவரையும் சமீபத்தில் ஷாக்காக வைத்தார். அதன்படி, "அதிகாலை எழுந்த உடன் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது யோகா செய்வேன், அதன்பின் அரைமணி நேரம் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், அடுத்த அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்வேன்.

அதுமட்டுமல்லாமல் எனது ஸ்டெமினாவை அதிகரிக்கும் வகையில் பைலேட்ஸ் பயிற்சிகள், புஷ்-அப், புல்-அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகள் ஆகியவை செய்வேன். இதனால் எனது உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. இதனை தொடர்ந்து, தினமும் ஒரு மணி நேரமாவது நடனப் பயிற்சிகளுக்கு என நேரம் ஒதுக்குவேன், இது தவிர ஓய்வு நேரங்களில் டிரக்கிங், டிராவலிங் சென்று எனது பொழுதை கழிப்பேன்" என கூறி இருந்தார்.

இப்படி என்றுமே தன்னை அழகா ஃபிட்டாக வைத்து கொள்ளும் கயாடு லோஹர் தற்பொழுது நீல நிற உடையில் ஆளை மயக்கும் அழகில் புதிய புகைப்படங்களை இணையத்தில் உலா வர வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: உச்சபட்ச கிளாமரில் கயாடு லோஹர்..! மனதை பறிகொடுக்கும் இளசுகள்..!