தமிழ் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் அதிகமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை வரலட்சுமி. நடிகர் சரத்குமார் முதல் மனைவியின் மக்களும், ராதிகாவிற்கு செல்ல மகளுமான இவர், இதுவரை பல படங்களில் கதாநாயகியாகவும் வில்லியாகவும் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வலம் வருபவர். இவர் நடித்த திரைப்படங்களில் இன்றும் மக்கள் பெரிதாக பேசும் படம் என்றால், 2012ம் ஆண்டில் விக்னேஷ் சிவனின் காதல் நாடகத் திரைப்படமான "போடா போடி" தான். இத்திரைப்படத்தில் நடித்து தான் வரலட்சுமி கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படி, பார்க்க ட்ரெராகவும் மறுபக்கம் அழகாகவும் இருக்கும் வரலட்சுமி "எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்த பின்பு நடிகையாக திரையுலகில் புது அவதாரம் எடுக்க நினைத்தார். அதற்காக, மும்பையில் உள்ள "அனுபம் கெரின்" என்ற நடிப்புப் பள்ளியில் தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டார். அதன் பின் தான் "போடா போடி" திரைப்படத்தில் சிம்புவுடன் நடித்தார்.
இதையும் படிங்க: ராதிகாவின் மீது கண்களை வைத்திருக்கும் ரஜினிகாந்த்...! சுக்குநூறாய் உடைந்த ரகசியம்..!

இதனை அடுத்து சுந்தர் சி- யின் மசாலா படமான "மத கஜ ராஜா"வில் விஷாலுடன் இணைந்து வரலட்சுமி பணியாற்றினார், ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக அந்தப் படம் அப்பொழுது வெளியிடப்படாமல் இத்தனை வருடம் கழித்து, தற்பொழுது வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றது. ஆனால் இப்படத்தில் பழைய தோற்றத்தில் மிகவும் கிளாமராக இருந்த வரலட்சுமியை பார்த்த ரசிகர்கள் அவரை மிகவும் கொண்டாடினர். இதனிடையில், நடிகர் சுதீப்புடன் கன்னடப் படமான "மாணிக்யா" படத்திலும், பாலாவின் "தாரை தப்பட்டை" படத்திலும் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென இடம் பிடித்தார்.

பின் சண்டக்கோழி 2, திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லியாகவும், சர்காரில் நடிகர் விஜய்க்கு வில்லியாகவும் தனது அபார நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். குறிப்பாக சண்டகோழியில் "உன்ன கொல் ஒரு பொம்பளையே போதும் என கூறி விஷாலை வெட்டவரும் கிளைமாக்ஸ் காட்சி அபூர்வமாக இருக்கும்" அதே போல், நடிகர் விஜய்யுடன் நடித்த சர்க்கார் திரைப்படத்தில், விஜய் வரலட்சுமியை பார்த்து "நான் கார்ப்ரேட் கிரிமினல் நீங்கள் பிறந்ததில் இருந்து கிரிமினல் என தெரியும்" என்பார்.
இந்த டயலாக்குகளுக்கு திரையரங்கில் விசில் பறந்தது. இந்த நிலையில், சமீபத்தில் அவரது உதவியாளர் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்க, அவருக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக அனைவரும் கூற, கங்கா சந்திரமுகியாக மாறியதை போல் ஒரு நொடியில் மாறி பத்திரிகையாளர்களிடம் சண்டையிட்டு, தன்னை விசாரிக்க வந்த அதிகாரிகள் மத்தியில் தான் நிரபராதி என்பதை நிரூபித்து வெளியேறினார்.

இப்படி இருக்க, நடிகை வரலட்சுமி கடந்த ஆண்டு தன்னுடைய காதலன் "நிக்கோலாய் சச்தேவ்" என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பலரால் பேசப்பட்டாலும் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகின்றனர். உதாரணத்திற்கு வரலட்சுமியின் 40-வது பிறந்தநாளை அவரது கணவர் ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாட வைத்து மகிழ்ந்தார்.

இப்படி இருக்க, வரலட்சுமியை விஷியத்திலும் அவரது திருமண விஷியத்திலும், அவரது தயாரான நடிகை ராதிகா சரியாக முடிவெடுக்க வில்லை என இணையத்தில் தொடர்ந்து கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் ராதிகா, சரத்குமாருக்கு இரண்டாவது மனைவி என்பதால் முதல் மனைவியின் பிள்ளையான வரலட்சுமியுடன் ராதிகா அவரது மகளான ரயான் மற்றும் மகன் ராகுல் ஆகியோரை பழக விடுவதில்லை என தவறான கருத்துக்கள் பரவிவர, இதனை கேட்ட ராதிகா சோர்வாக காணப்படுகிறார்.

இதனை பார்த்து, சற்று கோபமான ராதிகாவின் மகள் ரயான், ஒரு பேட்டியில், "எனது சகோதரியான வரலட்சுமியின் திருமணத்தில் எனது அம்மா ராதிகா மிகவும் ஈடுபாடாக இருந்ததை கண்டு பலரும் அவரை பாராட்டினர். ஆனால் பாராட்டும் அளவிற்கு இது பெரிய விஷயம் இல்லை காரணம் இது அம்மாவின் இயல்பு. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நானும், எனது சகோதரி வரலட்சுமியும் மிகவும் க்ளோஸாக தான் இருப்போம். வரலட்சுமி திருமணத்திற்கு பின் பலமுறை அவரது கணவருடன் எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார்.

நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்து வருகிறோம். இப்படி இருக்க இனி, எனது குடும்பம் குறித்து யாராவது தவறாக பேசினால் நானும் அம்மாவும் அவர்களை எளிதாக விட மாட்டோம்" என்று காட்டமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ராதிகாவின் மீது கண்களை வைத்திருக்கும் ரஜினிகாந்த்...! சுக்குநூறாய் உடைந்த ரகசியம்..!