இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் தமிழக பாஜக பயப்படாது... தமிழிசை கைதுக்கு எதிராக அண்ணாமலை ஆவேசம்...!
முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சவுந்தர ராஜன் கைதிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சவுந்தர ராஜன் கைதிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று அந்த இயக்கத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார், தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்படவிருந்தது.
சென்னை கேகே நகர் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழ் சௌந்தரராஜன் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்க வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையின் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்றும், அங்கிருந்து கலைந்து செல்லும் படியும் பாஜகவினரை வலியுறுத்தினர். ஆனால் தமிழிசை சவுந்தரராஜன் இது அமைதியான போராட்டம் என வலியுறுத்தியதோடு, கலைந்து செல்லவும் மறுத்தார். இதனையடுத்து பெண் காவலர்கள் தமிழிசை சவுந்தரராஜனை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இச்சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: உங்க வீட்டு பிள்ளைங்கள இந்தி படிக்க வைச்சுட்டு பொது இடத்தில் இந்தி எழுத்துகளை அழிப்பீங்களா.? திமுகவை தெறிக்கவிட்ட தமிழிசை.!
ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, @BJP4Tamilnadu சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர், அக்கா திருமதி @DrTamilisai4BJP அவர்களைக் கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை.
அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. திமுகவின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும்.
இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதலமைச்சர் அவர்களே?, தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்? என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அக்கறை இல்லை... முதல்வர் மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கிய தமிழிசை...!