ஜெயிலர் வசூலை முறியடித்த சாவா திரைப்படம்...! பாராட்டு மழையில் ராஷ்மிகா...!
நடிகை ராஷ்மிகா நடிப்பில் வெளியான சாவா திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நடிந்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ராஷ்மிகா மந்தண்ணா.பார்க்க க்யூட்டாகவும், அழகாவும், புன்னையுடனும் ஜெனிலியாவை போன்ற இவரது வெகுளித்தனமான நடவடிக்கைகளையும் பார்த்து கவரப்பட்ட பல இயக்குநர்கள் இப்படத்திற்கு பின்பு ராஷ்மிகாவுக்கு பல படவாய்ப்புகளை கொடுத்தனர்.
இதனால் கிரிக் பார்ட்டி திரைப்படத்தை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர். பின்னர் அதே ஆண்டு, விஜய் தேவர்கொண்டா உடன் 'கீதா கோவிந்தம்' என்னும் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய அத்தனை மொழி திரையுலகிலும் பிரபலமானவர். இதனை அடுத்து கன்னட நடிகரான "ரக்ஷித் ஷெட்டி" என்பவரை ராஷ்மிகா காதலித்தார். பின் இவர்களது நிச்சியதார்த்தம் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 2018ம் ஆண்டு திருமணம் நடக்க இருந்த வேளையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இதையும் படிங்க: Run it Up ... மீண்டும் கலக்கும் Hanumankind..!
இந்த சூழ்நிலையில், படத்தில் மட்டும் முழு கவனம் செலுத்திய ராஷ்மிகா, டியர் காம்ரேட், புஸ்பா (தி ரைஸ்), சுல்தான், சீதா ராமம், அனிமல், வாரிசு, குபேரா, புஷ்பா (தி ரூல்) போன்ற தமிழ் படங்களில் நடித்து உள்ளார். தற்பொழுது சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நடிகை ராஷ்மிகா கன்னட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் கன்னட மக்களையும் கன்னட ரசிகர்களையும் அவமதித்து விட்டார் என கூறி, அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பிரச்சனை செய்து வருகின்றனர். இதனால் ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு வேண்டும் என அவரின் சமூகத்தினர் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இப்படி இருக்க, இதுவரையில் இவர் நடிக்காத நடிக்கவே கூடாது என்று இருந்த வேடத்தில் தற்பொழுது நடிக்க இருக்கிறார். இயக்குநர் அதித்யா சர்போத்தர் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானாவுடன் ராஷ்மிகா நாயகியாக இணைந்து உருவாகவுள்ள திரைப்படம் தான் "தாமா". மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படம் ஹாரர் படம் என்பதாலும் ராஷ்மிகா முதல் முறை ஹாரர் படத்தில் நடிப்பதாலும் ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தண்ணா நடிப்பில் வெளியாகியுள்ள "சாவா" படம் பல கோடிகளை கடந்து வெற்றி படமாக மாறியுள்ளது. மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி-சாயி பாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட இப்படம் ரூ.130 கோடி பட்ஜெட்டில் தயாராகி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் காதலர் தினம் அன்று வெளியானது. முழுக்க முழுக்க ஹிந்தியில் உருவாகிய இந்த படம் இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் அனைத்து மொழிகளிலும் வெளியானது. இப்படத்தில் கதாநாயகனாக பாலிவுட் நடிகர் விக்கி கவுசலும் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகாவும் நடித்து இருக்கிறார்.
இப்படி இருக்க, சாவா திரைபடம் வெளியான முதல் நாளிலேயே இந்திய அளவில் மட்டும் ரூ.33.1 கோடியும், உலக அளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த சூழலில், படம் வெளியாகி 33 நாட்கல் கடந்துள்ள நிலையில் படத்தின் வருமானம் ஜெயிலர் வருமானத்தையே தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ.761 கோடியும், இந்தியாவில் ரூ.560 கோடியும் இதுவரை வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சுனிதா வில்லியம்ஸுக்கு வாழ்த்து கூறிய நடிகர் மாதவன்...!