×
 

திரைபிரபலங்களை பீதியடைய செய்த தொழிலதிபர்..!  ஒரே புகார்.. 25 பேர் மீது வழக்கு..! விஜய்தேவர்கொண்டா, பிரகாஷ்ராஜ் காட்டம்..!

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்த திரைபிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.  

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் பணத்தை கொடுத்து சிக்கி கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்து பின் உயிரை மாய்த்து கொள்ளும் அளவிற்கு கொண்டு செல்வது என்றால் அது ஆன்லைன் சூதாட்டம் தான். சில நேரங்களில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல சூதாட்ட விளம்பரங்களில் நடிகர் நடிகைகள் நடிப்பதை பார்த்து மக்கள் அதன் பின் செல்கின்றனர்.

குறிப்பாக சமீபத்தில் நடிகர் சரத்குமார் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்ததற்காக விமர்சனத்திற்கு ஆளானார். இந்த விளம்பரதாரர்கள் தரப்பிலும் நடிப்பவர்கள் தரப்பிலும் இருந்து சூதாட்டத்தை நிறுத்துங்கள் என கேட்டால், இந்த விளம்பரத்தின் கடைசியில் "இந்த விளையாட்டு நிதி அபாயங்களுக்கு  உட்பட்டது" என கூறி தான் அனைத்தையும் செய்கிறோம் என கூறி அனைவரது சாபத்தையும் வாங்கி குவித்து வந்தனர். 

இப்படி இருக்க, ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தல் எப்பொழுது தான் சட்டம் தன் கடமையை செய்யும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பலனாக ஆன்லைன் சூதாட்டத்தை பேன் செய்வார்கள் என்று பார்த்தால் அதனை விட்டு அதில் நடித்தவர்களை கைது செய்து வருகின்றனர் காவல்துறையினர். இதுவரை 25த்திற்கும் மேற்பட்ட பிரபலங்களை கைது செய்துள்ளனர். 

இதையும் படிங்க: விக்ரம் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்... மலையாள நடிகர் புகழாரம்!!

இந்த சூழலில், 32 வயதான 'ஃபனீந்திர சர்மா' என்ற தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் காவல் நிலையத்தில் பிரபலங்கள் மீது  FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கொடுத்தபுகாரில், தன்னுடைய காலனியைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசும்போது, சினிமா பிரபலங்கள், இன்ஃப்ளுயன்சர்கள் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தும் சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறியதை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும் இப்படியே போனால் அனைவரும் பணத்தை இழந்து இறந்து போனால் யார் பொறுப்பு? என கேட்டு புகார் அளித்துள்ளார். 

இப்புகாரின் அடிப்படையில் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி, பிரனீதா, நிதி அகர்வால், அனன்யா நாகல்லா, சிரி ஹனுமந்து, ஸ்ரீமுகி, வர்ஷினி சௌந்தரராஜன், வசந்தி கிருஷ்ணன், ஷோபா ஷெட்டி, அம்ருதா சவுத்ரி, நயனி பவானி, நேஹா பதான், பாண்டு, பத்மாவதி, சாப்ரினி, பத்மாவதி, விஷ்ணு, நான் ஷியாமளா, டேஸ்டி தேஜா, மற்றும் பண்டாரு ஷேஷாயனி சுப்ரிதாம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,இந்த எஃப்ஐ ஆருக்கு பதிலளித்த நடிகர் "பிரகாஷ் ராஜ்" 2015-ம் ஆண்டு தான் இதுபோன்ற விளம்பரத்தில் நடித்தேன், ஆனால் ஒரு வருடம் கழித்து நாங்கள் விலகிவிட்டோம்" என விளக்கம் அளித்துள்ளார்.

தன்னை பார்த்த நெட்டிசன்கள், "சரி நடித்தவர்கள் மீது கேஸ் போட்டாச்சு அதற்கு காரணாமாக இருந்த நிறுவனத்தை என்ன செய்வீங்க?" என கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரஜினியுடன் இவரும் நடித்திருகிறாரா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட போட்டோவால் ரசிகர்கள் ஷாக்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share