×
 

நடிகர் மகேஷ் பாபுவுக்கு கோரிக்கை வைத்த அஷ்வின் மாரிமுத்து... அடுத்து அவருடன் படமா.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

நடிகர் மகேஷ் பாபுவுக்கு கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார் இயக்குநர் அஷ்வின் மாரிமுத்து.

அஷ்வின் மாரிமுத்து என்றால் திரையுலகில் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு தற்பொழுது அவர் இயக்கிய டிராகன் திரைப்படம் வெற்றி நடை போட்டு வருகிறது. கல்லூரி வாழ்க்கையும் அதன் பின்னான வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும், நண்பர்களின் அரவணைப்பையும், பெற்றோர்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் அழகாக உணர்த்தும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது.


  இந்த நிலையில், படத்தின் வெளியீட்டின் போது, AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம் நிறுவனர், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் மீண்டும் அடுத்த படம் வெளியாகும் என அப்டேட் கொடுத்து இருந்தார். தொடர்ந்து இரண்டு படங்களை கையில் வைத்திருக்கும் அஸ்வின், அடுத்த படமாக சிம்புவை வைத்து தான் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தும் வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் படத்தை பார்த்த இயக்குநர் சங்கரும், தனது எக்ஸ் தளத்தில், "டிராகன் திரைப்படம் ஒரு அழகான படம். இது போன்ற ஒரு படத்தை கொடுத்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுக்கு ஹாட்ஸ் ஆஃப். படத்தில் நடித்த அனைவரும் தனது கதாபாத்திரத்தை அருமையாக நடித்திருந்தனர்.படத்தின் கடைசி 20 நிமிடங்கள் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. உலகத்திற்கு தேவையான கருத்துக்களை படத்தில் அற்புதமாக இயக்குநர் காட்டியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திரைக்கு வந்த 10 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல்... சாதனை படைத்த 'டிராகன்'..!

இப்படி பலரது பாராட்டுகளை பெற்ற இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டு இருந்தார். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில், தனது தாய் மற்றும் தந்தை உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கீழ், "நான் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்ட, எனது பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனதற்காகவும், அடங்காத என்ஜினியரிங் மாணவனாக இருந்ததற்காகவும் தற்பொழுது பெற்றோரிடம் நான் கேட்கும் மன்னிப்பு தான் இந்த டிராகன் படம்" என்று குறிப்பிட்டு இருந்தார். இது பலராலும் பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து 11 நாட்கள் வரை திரையரங்குளில் ஓடி கொண்டு வரும் டிராகன் திரைப்படம் தற்போது வரை ரூ.110 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து  "காட் ஆஃப் லவ்" படத்தை குறித்து சிம்புவிடம் அஷ்வின் பேசிவருவதாகவும் கூறப்படுகிறது. அவரது அடுத்த படத்தின் கதை "ஓ மை கடவுளே" படம் போல் இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் பலரும் கூறிவருகின்றனர். 

இந்த நிலையில், டிராகன் படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது, பேசிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெலுங்கில் பிரபல நடிகரான மகேஷ் பாபுவிற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். என்னவெனில் தான் இயக்கிய "ஓ மை கடவுளே' படம் வெளியான போது அப்படத்தை பார்த்த நடிகர் மகேஷ்பாபு அதனை பாராட்டி ஒரு ட்வீட் போட்டார். அதனை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்த்து கொண்டாடினர். அதேபோல், 'டிராகன்' படத்தையும் அவர் பார்க்க வேண்டும், நிச்சயமாக இந்த படமும் அவருக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என்று உணர்ச்சி போங்க பேசினார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை சிம்புவுக்கு முன்பாக அஷ்வின் மகேஷ் பாபுவைத்து படம் எடுப்பாரோ என சந்தேகித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நான் தமிழ்ப்பொண்ணு இல்லை.. உங்கள் அன்பு விலைமதிக்காதது.. கண்ணீரோடு நன்றி சொன்ன 'டிராகன் ஹீரோயின்'..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share