×
 

குடும்பஸ்தன் படத்தின் காட்சிகள் தான் என் வாழ்க்கை.. மணிகண்டன் கண்ணீர் மல்க ஓபன் டாக்..! 

நடிகர் மணிகண்டனை தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டமான சூழ்நிலைகளை அழகாக கூறியிருக்கிறார். 

தமிழ் சினிமா நடிகர் ஒருவர் மேடையில் சினிமாவின் தத்துவத்தை அழகாக கூறி இருப்பார்.அதில், ஒருவன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என கடந்து சென்ற பொழுது மூன்று பேரை சந்தித்தானாம், முதலில் 'அவமானம்' என்ற நபரையும், இரண்டாவதாக 'அதிர்ஷ்டம்' என்ற நபரையும், மூன்றாவதாக 'வெற்றி' என்ற நபரையும் சந்தித்தாராம். இந்த மூன்று பேரில் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் வந்த "அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியுடம்" செல்ல முடிவெடுத்து முதல் நபரை விட்டுட்டு சென்றாராம் அந்த நபர். ஆனால் போன சில நாட்களில் மீண்டும் ரோட்டில் பைத்தியம் போல சென்ற அதே நபரை பார்த்த முதல் நபர். இதுவரை வாழ்க்கையில் "அவமானமான" என்னை தேர்ந்தெடுக்காதவங்க சினிமாவில் ஜெயிச்சதில்லை என்று சொல்லி அந்த நபரை அழைத்து சென்றாராம். 

இந்த கதைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பவரை தேடினால் அதற்கு மிகவும் பொருத்தமானவர் தான் நடிகர் மணிகண்டன். ஆரம்ப வாழக்கையில் கையில் பணம் கூட இல்லாமல், தான் உழைத்த சம்பளமான ரூ.150க்காக பல கிலோமீட்டர் அலைய வைக்கபட்டவர். தன்  நண்பர்களின் உதவியில் பல நாட்கள் வாழக்கையை கழித்து கொண்டு இருந்தவரை உற்சாகப்படுத்திய நண்பர்கள், பிரபல டீவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் உற்சாகப்படுத்த தனது கேரியரை சினிமாவில் ஆரம்பித்தவர். பின் சினிமாவில் பல பிரபலங்களுக்கு பின்னணியாக குரல் கொடுத்து வந்தார். பின் நிண்ட நாட்கள் வாழ்க்கையில் சரியான சம்பளமும் உணவும் இல்லாமல் கஷ்டப்பட்ட மணிகண்டனுக்கு சினிமாவில் துணை நடிகராக நடிக்க "விக்ரம் வேதாவில்" மாதவன் மற்றும் விஜய்சேதுபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் 'காதலும் கடந்து போகும்' போன்ற படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். 

இதையும் படிங்க: இந்த ஆண்டு வெளியான படங்களில் இத்தனை படம் தான் ஹிட்-ஆ..! என்ன கொடுமை சரவணன் இது..!

இவரது நீண்ட நாள் உழைப்புக்கு பலனாக அமைந்தது "ஜெய்பீம்" திரைப்படம். இதில் 'ராஜாக்கண்ணு' என்னும் கதாபாத்திரத்தை கண்முன் கொண்டுவந்து 'நடிப்பின் அரக்கன்' என்ற பெயரை பெற்றார். இதனை தொடர்ந்து 'குட் நைட்' திரைப்படத்தில் ஒரு மனிதனுக்கு குறட்டை எவ்வளவு பாதிப்பை தருகிறது எனவும் காதலிப்பவர்களுக்கு குறைவுகள் பெரிதல்ல என்பதை உணர்த்தும் படமான இப்படத்தில் கதாநாயகனாகவும், இதனை அடுத்து 'லவ்வர்' திரைப்படத்தில் கோபத்தை குறைத்து கொண்டு உழைப்பால் முன்னேறி காண்பிக்கும் கதாநாயகனாகவும் நடித்து இருப்பார். இப்படி இதுவரை கதாநாயகனாக நடித்த அனைத்து படங்களிலும் ஹிட் கொடுத்த மணிகண்டனுக்கு தற்பொழுது வெளியான "குடும்பஸ்தன்" திரைப்படமும் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. ஓடிடி தளங்களிலும் 50மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றி அடைந்துள்ளது. 

இப்படி இருக்க, தற்பொழுது பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசிய மணிகண்டன், சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு வாங்கி, அதற்கு உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து வெகுவிமர்சையாக கிரகப்பிரவேசம் செய்து இருந்தோம். அப்போது என் பிரண்ட்ஸிடம் சென்ற என் அப்பா, "அவனை நான் பெத்தேன், படிக்க வைத்தேன் அவ்வளவுதான், மத்தபடி மீதி எல்லாவற்றையும் நீங்க தான் பாத்துக்கிறீங்க, இனியும் அவன பத்திரமா பாத்துக்கோங்க" என்று சொன்னார். அவர் கூறியது உண்மை தான். ஏனெனில் என்னுடைய கேரியர்ல நான் எடுத்த செலக்சன்ல இருந்து, சினிமாவிற்கு நான் தகுதியானவனா என்று நான் நினைக்கும் போதெல்லாம், சினிமாவுக்கு நீ தகுதியானவன் தான் என்று மற்றவர்களை போல போலியாக சொல்லாமல், இல்ல இப்போதைக்கு உனக்கு தகுதி இல்லை, இன்னும் நீ நிறைய கத்துக்கணும் என்று சொல்லி என் பிரண்ட்ஸ் தான் மோட்டிவேட் பண்ணுவாங்க. அதுமட்டுமல்லாமல் கிட்ட தட்ட நாலு வருஷம் எனக்கு வேலையும் இல்ல, எங்க வீட்ல சுத்தமா காசும் வாங்கவே இல்ல, அந்த நாலு வருஷமும் என்னுடைய பிரண்ட்ஸ் பிரவீன் மற்றும் ராகேந்து தான் தினமும் காசு கொடுப்பாங்க" என அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.  

இதனை பார்த்த நெட்டிசன்கள், உண்மையாக கஷ்ப்படுகிறவர்களுக்கு 'கடவுள்' நண்பன் ரூபத்தில் கண்டிப்பாக துணையாக இருப்பார். அதனால் தான் மணிகண்டனுக்கு சிறந்த நண்பர்கள் கிடைத்து இருப்பதாகவும், நமக்கெல்லாம் கொழுப்பு அதிகமாக இருப்பதால் 'எமன்' நண்பனாக வந்திருப்பதாக பதிவிட்டு சிரிப்பலையை ஏற்படுத்தி வருகின்றனர். 

    


 

இதையும் படிங்க: 'லக்கி பாஸ்கரை' ஓரங்கட்டிய 'குடும்பஸ்தன்'..! ஓடிடியில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து அபார வெற்றி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share