வரதட்சணை வாங்கினேனா.. நானா.. நெவர்..! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா பாண்டியன்..!
தன் மீது விழுந்த வரதட்சணை குற்றச்சாட்டுக்கு சிறப்பான விளக்கம் அளித்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.
பார்க்க அழகாவும் சிரிப்பால் மனதை கொள்ளை கொள்பவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். கதாநாயகியாக படத்தில் நடித்த இவரை மக்கள் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் ரியாலிட்டி ஷோக்களில் வந்த இவரை பிரபலமானவர் என மக்கள் ஏற்று கொண்டனர். அந்த வகையில் ரியாலிட்டி ஷோக்களின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் வெளியான "ஜோக்கர்" என்ற படத்தில் நடித்த ரம்யா பாண்டியன் அதனை அடுத்து "ஆண் தேவதை" என்ற படத்திலும் நடித்திருந்தார். ஆனால் அவரது துருதஷ்டம் இப்படத்தில் அவருக்கு சிறந்த வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த ரம்யாவுக்கு 2020ஆம் ஆண்டு சின்னத்திரை தொலைக்காட்சி மூலமாக பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தது.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் முக்கிய போட்டியாளராகவும் ரசிகர்களை கவர்ந்த போட்டியாளராகவும் இடம்பெற்று இருந்தார். இந்த போட்டியில் கோமாளியாக புகழுடன் தனது குறும்பு தனமான விளையாட்டை காண்பித்தும் தனது சமையல் திறமையை காண்பித்தும் அந்த போட்டியில் இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தை பெற்றார்.
இதையும் படிங்க: Karthigai Deepam: ரேவதியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம் - விஷயம் இது தானா? கார்த்திகை தீபம் அப்டேட்!
இப்படி இவரை குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்த்த மக்கள் அவரை புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்க, தவளை தன் வாயால் கெடும் என்பதை போல, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று அவருக்கு அவரே சூனியம் வைத்து கொண்டார். அந்த அளவிற்கு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று பலரது வயிறெரிச்சலை வாரி குவித்தார். போதாத குறைக்கு அவரது தம்பியும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து நடிகர் ஆரியை புகழ, ஷோ ஹிட்டானது, இவரது இமேஜ் டேமேஜானது.
இந்த சூழலில், மீண்டும் தனது நற்பெயரை பெற, இன்ஸ்ட்டாவில் அதிக புகைப்படங்களை பகிர்ந்த ரம்யா பாண்டியன், கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னையில் யோகா பயிற்சி பள்ளியை வைத்து நடத்திவரும் லோவல் தவான் என்பவரை காதல் திருமணம் செய்தார் நடிகை ரம்யா பாண்டியன். இதனை குறித்து விசாரிக்கையில், யோகா பயிற்சி செய்ய லோவல் தவானின் பயிற்சி கூடத்திற்கு சென்ற ரம்யாவுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி பின் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடிப்பெற்றது தெரியவந்தது.
இப்படி இருவரது ஹனிமூன் வாழக்கை நன்றாக ஓடிக்கொண்டிருக்க ரம்யா பாண்டியனின் அம்மா தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில்,ரம்யா திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளை வீட்டில் இருந்து பல லட்சங்கள் கொடுத்து அதற்கு நகை வாங்கிக்கொள்ளும்படி கூறினார்களாம். அதனால் திருமணத்திற்கு தாங்கள் பெரிதாக எந்த செலவும் செய்யவில்லை என கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் என் பெண்ணுக்கு அவர்கள் தான் வரதட்சணை கொடுத்து அழைத்து சென்றார்கள் என்பதை போல் அவர் பேச, இந்த பேட்டி காட்டுத்தீ போல் இணையத்தில் வேகமாக பரவியது.
இதனை தொடர்ந்து, ரம்யா பாண்டியன் திருமண வாழக்கைக்கதை விமர்சனத்திற்குள்ளாக, இதனை பார்த்து கடுப்பான ரம்யா, இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், ‛‛என்னைப் பொறுத்தவரை பள்ளியில் படிக்கிற காலங்களில் இருந்தே எனது செலவுகளை நான்தான் பார்த்துக் கொண்டு வருகிறேன். கல்லூரி படிப்பை முடித்த பிறகும் வேலை செய்து சம்பாதித்து எனது தேவைகளை பூர்த்தி செய்து வந்தேன். சினிமாவில் நடித்த காலகட்டத்தில் தான் நான் எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால் இப்போது கூட எனது செலவையும் வீட்டையும் நான் தான் பார்த்துக் கொண்டு வருகிறேன்.
அதுமட்டுமின்றி என்னுடைய திருமணத்தின்போது கூட மாப்பிள்ளை வீட்டில் பாதி செலவும், எங்கள் வீட்டில் பாதி செலவும் செய்தோம். இது எல்லா வீடுகளிலும் நடப்பது தான். அதுமட்டுமல்லாமல் இப்படி நாங்கள் பாதிக்கு பாதி செலவு செய்து இருக்கும்போது, எனக்கு வரதட்சணை கொடுத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகி வருவது மனதிற்க்கு வேதனையாக உள்ளது. குறிப்பாக, மாப்பிள்ளை தரப்பு வழக்கப்படி தங்களது வீட்டுக்கு வரும் மணப்பெண்ணுக்கு ஆடை, நகைகளை எல்லாம் கொடுத்துத்தான் அழைப்பார்களாம்.
இதுதானே நம்முடைய மரபு. இல்லை என்றாலும் அவர்களுக்காக அந்த பழக்கத்தை மதித்து நாங்கள் ஏற்றுக் கொண்டோமே தவிர வேறு ஒன்றுமில்லை. மேலும், இதை வைத்து ரம்யா பாண்டியனுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொண்டதாக யாரும் செய்தி வெளியிடாதீர்கள். நம்முடைய பழக்கவழக்கங்களை அவர்கள் மதிப்பது போல அவர்களது பழக்க வழக்கங்களையும் நாம் மதிக்க வேண்டும். அதுதான் எங்கள் திருமணத்தில் நடைபெற்றது'' என்று அந்த வீடியோவில் தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: சினிமாவை ஆசிர்வதிங்க சாபம் விடாதீங்க..! சினிமா விமர்சகர்களை வெளுத்து வாங்கிய விஜயசாந்தி..!