×
 

அடுத்த கிளாமர் படத்தில் ரட்சிதா மகாலட்சுமி..! பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு..!

ரட்சிதா மகாலட்சுமியின் அடுத்த படத்திற்கான பூஜையானது சென்னையில் நடைப்பெற்று படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

மீனாட்சி என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் தான் ரச்சிதா மகாலட்சுமி. பாவாடை தாவணியிலும் அழகான பட்டு சேலையிலும்  கிராமத்தின் பெண்மையை விவரிக்கும் தோற்றத்தில் 'சரவணன் மீனாட்சி' என்ற தொடரில், என் சரவணன் கண்டிப்பாக ஒருநாள் வருவான் என கூறி வேட்டையனை கலங்கடித்த கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நம்ம ரச்சிதா. இந்த சீரியலால் பலரது குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்பட்ட இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலக்கினார். பின் நடிக்கும்பொழுதே சக நடிகரான தினேஷை காதல் திருமணம் செய்தார்.

ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை இருவரும் பிரிந்து விட்டனர். இவரது முன்னாள் கணவரான தினேஷும் பிக்பாஸில் கலந்து கொண்டு ரச்சிதாவுடன் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டார் ஆனால் அவரது முயற்சி வீணானதால் அமைதியாக அவரது வேலையை பார்த்து வருகிறார். அதன் பின், ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்த 'ஃபயர்' படத்தில் ஹீரோயினாக ரச்சிதா மகாலட்சுமி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாக அனைவரும் மகிழ்ந்தனர். காரணம் கண்டிப்பாக போலீசாகவோ, நாயகியாகவோ நடித்திருப்பார் என அனைவரும் கொண்டாடினர். ஆனால் அனைவரது எதிர்பார்ப்பையும் உடைக்கும் விதமாக இப்படத்தின் ட்ரெய்லர் அமைந்தது.

இதையும் படிங்க: கட்டும் சேலை மடிப்பில் கவர வைத்த பவித்ரா ஜனனி... இந்த சிரிப்புக்கு விலையே இல்லை.. பாராட்டும் ரசிகர்கள்..!

ஆனால் அதை விட இப்படத்தின் பாடலில் நீல நிற சேலையில் உச்சபச்சமான கிளாமரில் ரட்சிதா இருப்பதை பார்த்த பலரும் அவரை வசைபாடி தீர்த்தனர். இதனை தொடர்ந்து படம் ரிலீசாக, படம் பார்த்த அனைவரும் படம் நன்றாக இருந்தாலும், ஆபாச காட்சிகளை கொஞ்சம் குறைந்து இருந்திருக்கலாம் என்றும் இந்த படத்தை எப்படி குடும்பத்துடன் பார்க்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினர். இருப்பினும் பாதுகாப்பு என்பது இல்லாத காலகட்டத்தில் இப்படி ஒரு படம் தேவையா? என்பதை இயக்குனர் யோசித்து இருக்க வேண்டும் என கூறினர்.

இப்படி, படத்தில் கிளாமர் காட்சிகள் இல்லாமல் படமே கிளாமர் காட்சியாக இருப்பதை பார்த்த, பிரபல பத்திரிகையாளரான சேகுவேரா, ரச்சிதாவின் கிளாமர் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் 'ஃபயர்' படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டாலும், ஆபாசம் ரொம்பவே தூக்கலாக இருக்கிறது. இதை குடும்பத்துடன் பார்க்க முடியுமா? இந்த படத்தில் உள்ள நடிகைகள் அனைவருமே கிளாமராக நடித்திருந்தாலும் உச்சக்கட்டமான கிளாமரில் ரச்சிதா மகாலட்சுமி  நடித்திருக்கிறார்.

இவ்வளவு ஆபாசம் எதற்கு..? இதைவிட, ரச்சிதா பேசுவதை கேட்டால் எனக்கு கோபம் தான் வருகிறது. ஏனெனில் ரச்சிதா பணத்துக்காக இப்படி ஆபாசமாக நடிக்கவில்லை என்று கூறுகிறார். பிறகு சமூக சேவைக்காகவா இப்படி  ஆபாசமாக நடித்தார். சரி, சமூக சேவையாகவே இருந்தாலும் இந்த காட்சிகளுக்கு பணம் வாங்காமல் நடித்தேன் என்று ரச்சிதாவால் சொல்ல முடியுமா?.. ஏன் இப்படியெல்லாம் பேச வேண்டும்  என்று கூறினார். கடைசியாக, பாபநாசம் படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். ஆனால் இந்த படத்தை பார்க்க முடியாது என்று வேதனையுடன் கூறினார்.

இப்படி பலரது வசைபாடுதலுக்கும் ஆளான ரட்சிதா மகாலட்சுமி மனவேதனையில் முடங்கிவிடுவார் என நினைத்தவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தற்பொழுது மற்றொரு படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தி வெளியானது. இதனை உறுதிபடுத்தும் வகையில் நடிகை ரட்சிதா நடிக்க இருக்கும் புதிய படத்திற்கான பூஜை சிறப்பாக நடைபெற்று படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இப்படி இருக்க பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் மகாலட்சுமி. மேலும், படத்தின் டீசர் வெளியாகும் பொழுது இப்படத்தின் பெயர் வெளியாகும் என கூறியிருக்கிறார். 

இதனை பார்த்த ரசிர்கர்கள் படம் எடுப்பது பிரச்சனை இல்லை இந்த படத்திலாவது கொஞ்சம் கிளாமர் காட்சிகளை குறைத்தால் நன்றாக இருக்கும் என மறுபதிவு செய்து வருகின்றனர்.  


 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா... இலங்கையில் விறுவிறு படப்பிடிப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share