மீண்டும் சென்னை வரும் பிரஷாந்த் கிஷோர்.. இந்த முறை விஜய்யுடன் ஒரே மேடையில் கைகோர்ப்பு.!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26இல் நடைபெறவுள்ளது.
சென்னையில் நாளை மறுநாள் நடைபெறும் தவெகவின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் தேர்தல் வியூக மன்னர் பிரசாந்த் கிஷோர் கலந்துகொள்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி அண்மையில் ஓராண்டு முடிவடைந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைக் குறிக்கோளாகக் கொண்டு தவெக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வியூக மன்னர் பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு, அதிமுகவுடன் கூட்டணி என்கிற தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து பேசுபொருளாகியுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குப் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், 2026இல் தவெகவுக்குப் பணியாற்றுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா அதற்கான பணிகளை முன்னெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தவெக நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி கட்சியின் பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மாவட்ட வாரியாக குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகம் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவெகவில் இணைய போராடும் காளியம்மாள்... தடைபோடும் நபர்.... என்னதான் நடக்கிறது?