×
 

ஏப்ரல் 21-க்குள் கொடிக் கம்பங்களை அகற்றுங்கள்.. தமிழக அரசுக்கு கெடு விதித்த நீதிமன்றம்..!

தமிழகம் முழுவதும் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.

ராயபுரம் பகுதியில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பத்தையும் கல்வெட்டையும் அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் சென்னை  உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொது  நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமதுசபீக் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், ஏற்கனவே மதுரை அமர்வு, தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும், தனி நீதிபதியின் உத்தரவை நீதிபதி நிஷாபானு தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. அரசு செயலாளர் ஆஜராக சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

இது தொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, மதுரை அமர்வு அளித்த காலக்கெடு   ஏப்ரல் 21 ஆம் தேதி முடிவடைவதால், அதற்குள்  தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்படங்களை அகற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.

அகற்றவில்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடரலாம் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: கல்விக்கடன் ரத்து தேர்தல் வாக்குறுதி என்னவானது..? அமல்படுத்தக்கோரி பொதுநல மனு தாக்கல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share