×
 

வேலையை காட்டிய மூலிகை பால்! கார்த்தியை நம்ப மறுக்கும் ரேவதி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி மூலிகை பாலை குடித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

சாமுண்டீஸ்வரி பாலை குடித்த நிலையில், மீதம் இருந்த பாலை மயில்வாகனம் தனது மனைவி ரோகிணிக்கு கொடுக்க இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமாகிறது. 

மறுபக்கம் ரூமுக்குள் வரும் ரேவதி கார்த்தியிடம் என்னோட புடவை புடிச்சிருக்கா? நகைகள் பிடிச்சிருக்கா? மேக்கப் பிடிச்சிருக்கா? ஏதாவது பிடிக்கலைன்னா சொல்லுங்க மாத்திட்டு வந்திருடுறேன். இந்த வீட்டில் எல்லாம் நீங்க சொல்ற மாதிரி தானே நடக்குது என்று கோபப்படுகிறாள். 

கார்த்திக் ஏன் ரேவதி இப்படி எல்லாம் பேசுறீங்க? எனக்கும் இந்த கல்யாணம் நின்றதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்ல ரேவதி அதை ஏற்க மறுத்து தரையில் படுத்து தூங்க கார்த்திக் பெட்டில் படுத்து தூங்குகிறான். 

இதையும் படிங்க: Karthigai Deepam: கார்த்திக் கேட்ட கேள்வி? கோபத்துடன் முதலிரவுக்கு தயாராகும் ரேவதி - கார்த்திகை தீபம் அப்டேட்!

அடுத்த நாள் காலையில் தான் ஆசைப்பட்ட மாதிரியே ரோஹிணியுடன் நெருக்கமாக இருந்த சந்தோசத்துடன் மயில்வாகனம் வெளியே வருகிறான். அதே போல் ராஜராஜனும் சந்தோசமாக வெளியே வர மயில்வாகனம் என்ன மாமா ரொம்ப சந்தோசமா வரீங்க என்று கலாய்க்கிறான். 

இதை தொடர்ந்து கார்த்திக் இன்ஸ்பெக்டர் ஒருவரை சந்தித்து மகேஷை கண்டு பிடிக்கணும், அவன் வந்தா தான் ரேவதிக்கு என்னை பற்றி புரிய வைக்க முடியும் என பேசுகிறான். இன்னொரு பக்கம் மாயா, சந்திரகலா மற்றும் சிவனாண்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து பேச மாயாவிடம் மகேஷ் காணவில்லை என போலீசில் கம்பளைண்ட் கொடுக்க சொல்கின்றனர்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

இதையும் படிங்க: வேண்டா வெறுப்பில் ரேவதி..! குடோனில் மகேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share