பாகிஸ்தானில் 500 பயணிகளுடன் ரயில் ஹைஜாக்... அதிரவைத்த பலூச் கிளர்ச்சிப் படை...!
பாகிஸ்தானில் 500 பயணிகளுடன் ரயில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் போராளிகள் அரசுக்கு எதிராக அதிரடி தாக்குதல் நடத்தி 500 பயணிகளுடன் ரயிலை கடத்தினார்கள். துப்பாக்கி சண்டையில் பல வீரர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். அவர்களை தூக்கி விடுவோம் என்று போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் அதிர்வலைகளை ஏற்படுத்துள்ள இந்த செய்தியில் தாக்குதல் பற்றிய விவரம் வருமாறு:-
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவில் இருந்து பிரஷாகர் நோக்கி சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் இன்று துப்பாக்கி முனையில் 500 பயணிகளுடன் கடத்தப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக மும்முனைத் தாக்குதல்: பாகிஸ்தான்- வங்கதேசத்துடன் சேர்ந்து அடித்து ஆடும் சீனா..!
பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பிரிவினைவாத குழுவான பலூச் விடுதலை ராணுவம் (BLA) இந்த கடத்தலுக்கு பொறுப்பேற்று இருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் பயணிகளை பணய கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும், அவர்களில் 6 பாகிஸ்தான் வீரர்களை கொன்று விட்டதாகவும் அந்த அமைப்பு கூறி இருக்கிறது.
மிகவும் கவனமாக திட்டமிடப்பட்ட நடவடிக்கை இது என்றும் அந்த அமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சி மாவட்டத்தில் உள்ள மாக் டௌன் அப் இ-கம் பகுதிக்கு அருகில் இந்த திடீர் தாக்குதல் நடந்தது. அங்கு BLA போராளிகள் ரயில் தண்டவாளங்களை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் எட்டாவது எண் சுரங்கப்பாதை அருகே ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ஆயுதம் தாங்கிய துப்பாக்கி போராளிகள் ரயிலில் புகுந்து பயணிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனால் பயணிகள் இடையே பீதி ஏற்பட்டது.
இதில் ரயில் இன்ஜின் டிரைவர் படுகாயம் அடைந்தார். மேலும் பல பயணிகளும் காயம் அடைந்ததை ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மீட்பு குழுவினர் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டி அடிக்கும் நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார்கள். மேலும் உடனடியாக அவசர கால நிவாரணையில்உதவிக்கு அனுப்பப்பட்டது.
இதற்கிடையில் பி.எல்.ஏ அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஒரு அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். பாகிஸ்தான் படைகள் எந்த ஒரு ராணுவ தலையீடும் ராணுவம் காவல்துறை மற்றும் உளவுத்துறை சேவைகளை சேர்ந்த செயலில் உள்ள பணியாளர் உட்பட அனைத்து கைதிகளையும் தூக்கிலிட வழிவகுக்கும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பலூசிஸ்தான் மாகாண அரசு செய்தி தொடர்பாளர் கூறும் போது இந்த கடத்தல் சம்பவத்தின் போது போராளிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்ததாகவும் குறிப்பிட்டார். பயணிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டி உள்ள ஹலோ சிஸ்டம் நீண்ட காலமாக போராளிகளின் மையமாக இருந்து வருகிறது. BLA போன்ற குழுக்கள் பாதுகாப்பு படையினரையும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (சிபிஇசி) திட்டங்கள் உட்பட உள்கட்டமைப்பையும் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
செவ்வாய்க்கிழமை நடந்த விமான கடத்தல் போராளிகளின் வியக்க வைக்கும் தந்திர யுக்திகளை குறிக்கிறது. இது பிராந்திய ஸ்தலத்தரமையை குறித்து எச்சரிக்கை எழுப்புகிறது. பாதுகாப்பு படைகள் அணி திரளும் போது பணய கைதிகளின் தலைவிதி ஊசலாட்டத்தில் தொங்கும் நிலை ஏற்படும் என்று வர்ணித்து, செய்தியாளர் இந்த தகவலை முடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு வழங்கிய ரூ.1,74,29,85,00,000 கடன்… இரக்கம் காட்டிய சீனா..!