சரக்கால் சிக்கிய வெங்கடேஷ்... வேட்டையாட தயாரான சண்முகம்! அண்ணா சீரியலின் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா சீரியலின் இன்றைய அப்டேட்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பேரணிக்கு வெங்கடேஷ் மீது சந்தேகம் எழுந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கோவிலுக்கு வந்த சண்முகம் என் தங்கச்சி மீதான களங்கத்தை போக்கணும்.. யார் இப்படி பண்ணது என்பதை கண்டு பிடிக்கணும், எனக்கு ஒரு வழியை காட்டு என முருகனிடம் வேண்டுகிறான்.
மறுபக்கம் பரணி வெங்கடேஷ் மீது சந்தேகப்பட்டு அவனை பின்தொடர்ந்து வந்த நிலையில் முகமூடி அணிந்து முகத்தை மூடியபடி சரக்கு வாங்கி கொண்டு அந்த டீ கடையில் வேலை செய்தவனை சந்திக்கிறான். இதனால் இது அனைத்தும் வெங்கடேஷின் வேலை என்பது தெரிய வருகிறது.
உடனே சண்முகம் மற்றும் முத்துபாண்டிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி உடனே இங்கு வர சொல்கிறாள். இது எதுவும் தெரியாத வெங்கடேஷ் சாதாரணமாக வீட்டிற்கு சென்று விடுகிறான். இசக்கிக்கு போன் செய்து வெங்கடேஷை வெளியே விடாதீங்க என்று சொல்கிறாள்.
இதையும் படிங்க: ரத்னாவுக்காக ஷண்முகம் எடுத்த சபதம்! வெங்கடேஷ் சிக்க போவது எப்படி? அண்ணா சீரியல் அப்டேட் !
வெங்கடேஷ் வீட்டில் சாதாரணமாக இருக்க சண்முகத்தின் தங்கைகள் அவனை வெளியே விட கூடாது என கவனமாக இருக்க வெங்கடேஷ்க்கு சந்தேகம் வந்து வீட்டில் இருந்து தப்பிக்க திட்டம் போடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
இதையும் படிங்க: இசக்கியிடம் சிக்கிய வெங்கடேஷ்; அசிங்கப்பட போகும் ரத்னா! இன்றைய அண்ணா சீரியல் அப்டேட்!