கண்ணா மூன்று லட்டு தின்ன ஆசையா..! பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்..!
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்பொழுது அடுத்த படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.
தமிழ் திரையுலகில் தனது ஐடி வேலையை விட்டு, படம் எடுக்க நினைத்து, "ஷார்ட் பிலிம்ஸ்" மூலமாக தனக்கான பல தயாரிப்பாளர்களை தேடி அலைந்து, பின் ரவி மோகனை வைத்து, 90ஸ் காலத்து நினைவுகளையும், 90ஸ் காதலையும், அப்பொழுது உள்ள விளையாட்டையும், பீலிங்ஸையும் கலந்து மிகவும் நகைச்சுவையாகவும் சிந்திக்க வைக்கும் விதத்திலும் "கோமாளி" என்ற படத்தை மக்களுக்கு கொடுத்து, பலரது பாராட்டையும் பெற்றவர் இயக்குநர் "பிரதீப் ரங்கநாதன்".
இப்படம் வெற்றியை தொடர்ந்து, தானே ஹீரோவாக நடிக்க தயாராகி அவரது இரண்டாவது படத்திற்கான கதைகளை முடித்துவிட்டு அதற்கான நடிகையை தேடிய பொழுது, பிரதீப் நடிக்கிறார் என தெரிந்தவுடன் பல ஹீரோயின்கள் இந்த படத்தில் நடிக்க மறுத்து சென்றனர். ஆனால் அதற்காக வருத்தப்படாமல் தனது முழு நம்பிக்கையையும் தன் உழைப்பின் மீது வைத்து பயணம் செய்த பிரதீப்புக்கு, இவனா என்பவர் நடிகையாக கிடைக்க, சிறப்பாக படத்தை இயக்கி வெளியிட்டார், இத்தனை வேதனைகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் இந்தியா முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.
இதையும் படிங்க: ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை கயாடு லோஹர்... தமிழில் வரிசை கட்டும் படங்கள்.!
இதனை அடுத்து பிரதீப் என்ன படம் எடுப்பார் என ரசிகர்கள் காத்து கொண்டிருக்க ஒரு நாள் "பல நாள் போட்டோ நினைவு சாலஞ்சை" நினைவு வைத்து, பத்து வருடத்திற்கு முன் அவரது சீனியரும் அவரும் பேசிக்கொண்ட "மச்சா நேர்ல பாக்கத்தான் ஒரு மாதிரி இருக்க ஆனா ஃபிரேம்ல சூப்பரா இருக்க " என்ற அந்த பதிவை நினைவு செய்து படத்திற்கான முதல் இன்றோ வீடியோவை வெளியிட்டனர். இதனை அடுத்து படத்தின் பெயர் என்ன என குழம்பி போய் இருந்த ரசிகர்களுக்கு இப்படம் பெயர் "டிராகன்" என டீசர் மூலமாக கூறி படத்திற்கான ஹைப்பை ஏற்றினர். பின் ஒருவழியாக இரண்டு ஹீரோயினுடனும், விஜே சித்து, ஹர்ஷத்கான் முதலியானோருடன் பிரதீப் நடித்த டிராகன் படம் பிப்ரவரி மாதம் வெளியாகி தற்பொழுது மெகா ஹிட் அடித்துள்ளது. இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் ஹைத்ராபாத்தில் நடைபெற்றது. அப்போது இப்படத்தின் இயக்குனர் அஸ்வின் மாரிமுத்து தனது மகிழ்ச்சியை மக்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதனுடன் நடிக்க நடிகைகள் மறுத்த காலம் மாறி போய், தற்பொழுது அவருடன் நடிக்க பல நடிகைகள் நடிக்க தயாராகி இருக்கின்றனர். அந்த வரிசையில் தற்பொழுது பிரதீப் நடிக்க இருக்கும் படத்தில் அவருடன் மூன்று நடிகைகள் நடிக்க இருக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்,சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், நடிக்க உள்ள பிரதீப் ரங்கநாதனுடன் அவருக்கு ஜோடியாக பிரேமலு திரைப்பட பிரபலம் மமிதா பைஜு நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்பொழுது அனு இமானுவேல் மற்றும் சீரியல் நடிகையான ஐஸ்வர்யா ஷர்மா ஆகிய இரண்டு நடிகைகள் அவருடன் நடிக்க உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் வெற்றி என்றால் இப்படி இருக்க வேண்டும் எனவும் வேண்டாம் என நிராகரித்தவர்கள் முன்பாக வாழ்ந்து காண்பிப்பது தான் கெத்து என்பதை நிரூபித்து இருக்கிறார் பிரதீப் என கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனுக்கு சீமான் அப்பாவா..? விக்னேஷ் சிவனால் சூடுப்பிடித்த இணையதளம்!!