×
 

பார்வையால் மயக்கும் மிருணாளினி ரவி..! ட்ரெடிஷனல் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட்..!

ட்ரெடிஷனல் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை காலி செய்த மிருணாளினி ரவி.

கண்களின் காந்த வார்த்தைகளால், இடையின் சொக்க வைக்கும் அழகால், முத்து போன்ற அழகிய சிரிப்பால், ஒவ்வொரு ரசிகர்களின் நெஞ்சை உறைய வைக்கும் இயற்கையே போற்றும் பேரழகி என்றால் அது நடிகை மிருணாளினி ரவி தான்.  

பாண்டிச்சேரியில் பிறந்த மிருணாளினி ரவி, பொறியியல் படிப்பை முடித்தவுடன் ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் டப்ஸ் மேஷ், டிக் டாக் செய்து வந்தார். இவரது ரீல்சால் பெரிதும் கவரப்பட்ட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, 2019-ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்து, தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக்கினார். பின்னர் இவர் சுசீந்திரன் இயக்கிய 'சாம்பியன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இதையும் படிங்க: நடிகை ஷாலினி பாண்டே அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம்..! மிருணாளினி ரவியின் 'நச்' பதில்..!

குறிப்பாக சூப்பர் டீலக்ஸ் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் இவரை தேடிவந்தது. அதன் பின்னர் கடலகொண்ட கணேஷ் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார் மிருணாளினி.

பின்னர் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வந்த இவர், இதுவரை தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்திலும், சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் என்ற படத்திலும், மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் ஜாங்கோ என்ற படத்திலும், ஆனந்த் சங்கர் இயக்கத்தில் எனிமி என்ற படத்திலும், பொன்ராம் இயக்கத்தில் எம் ஜி ஆர் மகன் என்ற படத்திலும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற படத்திலும், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இப்படி, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் தற்போது பிஸியாக நடித்து வரும் மிருணாளினி. தற்போது தமிழில் போதிய பட வாய்ப்பு இல்லாததால் பிற மொழி படங்களில் மிகவும் ஆக்ட்டிவாக நடித்து வருகிறார். 

தற்பொழுது சுரேஷ் குமார் எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டூப்ளிகேட் பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் மிருணாளினி ரவி, தனது சோஷியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார், அவ்வப்போது தனது கிளாமர் மற்றும் ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.


அந்த வகையில் தற்பொழுது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டை பச்சை நிற பட்டு புடவையில்... பயபக்தியோடு கொண்டாடிய சாக்ஷி அகர்வால்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share