ஷுட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நயன்தாரா... இயக்குநரையே கடுப்பாக்கிய நயனின் செயல்..!
எல்லா இடங்களிலும் சிக்கி தவிக்கும் நயன்தாராவிற்கு அடுத்த சிக்கலை கொடுத்து இருக்கிறார் நடிகர் சரத்குமார்.
தமிழ் சினிமாவில் இன்று பலரது விமர்சனங்களை சரிசமமாக வாங்கி வருபவர் நடிகை நயன்தாரா. "நான் யார்.. நான் யார் என படத்தில் சுற்றி திரிந்தவரின் உள்மனதில் நீங்கள் தான் லேடி சூப்பர் ஸ்டார்" என யாரோ நம்ப வைத்திருக்கிறார்கள் என ரசிகர்கள் கலாய்க்கும் அளவிற்கு இவரது நிலைமை மாறியுள்ளது.
நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து தற்பொழுது பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார். இப்படி பல படங்களை தன் கைகளில் வைத்திருக்கும் நயன்தாரா, வாழ்க்கையில் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் கடந்து வந்தவர். இவரை ஏளனமாக பேசியவர்கள் மத்தியில் இன்று சாதித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடனும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கானுடனும் நடித்து தனக்கென ஒரு இடத்தை வகுத்தவர். இதனை அடுத்து, கோலமாவு கோகிலா, அறம் என இவர் கதாநாயகன் இல்லாமல் நடித்த படங்களும் ஹிட் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: வெளியானது ஆர்யாவின் "மிஸ்டர் எக்ஸ்".. ஃபர்ஸ்ட் சிங்கிளை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டம்..!
இந்த சூழலில், நயன்தாரா தனது திருமணத்திற்கு பின் பலரது விமர்சனங்களில் சரிசமமாக சிக்கி வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பின் முதலில் திருமண ஆவணப்படம் வெளியாவதில் சிக்கல் வந்தது, அதன் பின் ஒருவழியாக ஆவணப்படத்தை வெளியிடலாம் என ட்ரெய்லரை ரிலீஸ் செய்தபோது தனுஷிடம் இருந்து 'காபி ரைட்ஸ்' சிக்கல் வந்தது. பின் நான் "லேடி சூப்பர் ஸ்டார்" இல்லை என்றார் உடனே ரசிகர்கள், நடிகர்கள் , நடிகைகள் என பலரிடமிருந்து பலரூபத்தில் சிக்கல் வந்து கொண்டு இருக்கிறது. பார்க்கும் இடத்தில் எல்லாம் கன்னி வெடி வைப்பது போல், நயன்தாரா திருப்பும் இடம் எல்லாம் தற்பொழுது கன்னி வெடியை அவரே வைத்து தடுமாறி வருகிறார். இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் ராக்காயி, HI, மண்ணாங்கட்டி, dear students என பல திரைப்படங்களை தனது கைவசம் வைத்துள்ள நயன்தாரா தனது பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட "முக்குத்தி அம்மன் 2"வில் தற்பொழுது நடித்து திஷ்டிகளை கழிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், நயன்தாராவின் அறிமுகப்படமான 'ஐயா' திரைப்படம் யாராலும் மறக்க முடியாது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். தனது வெகுளித்தனமான நடிப்பில் அப்பொழுதே ரசிகர்களை உருவாக்கியவர். அதன் பின் பல படங்களில் நடித்து தற்பொழுது ஸ்டாராக உள்ளார் என கூறலாம். இப்படி இருக்க இப்படத்தில் நயன்தாராவுக்கு நடந்த நிகழ்வை பேட்டியின் பொழுது பகிர்ந்து இருக்கிறார் சரத்குமார்.
சரத்குமார் பேசுகையில், ஐயா படபிடிப்பு சமயத்தில், முதல் நாள் சூட்டிங்கிற்கு வந்த நயன்தாரா, பயங்கர மாடர்ன் ட்ரெஸ்சில் வந்து இறங்க, படப்பிடிப்பு தளத்தில் உள்ளோர் ஸ்தம்பித்து போனார்கள். இதனைபார்த்த இயக்குநர் 'ஹரி' ஒழுங்கா நயந்தாராவை கூட்டிட்டு போங்கய்யான்னு துரத்த ஆரம்பிச்சிட்டாரு. பின்பு நயன்தாரா தான் இந்த படத்துக்கு ஹீரோயின்னா, இந்த பட கேரக்டருக்கு சுத்தமா செட்டே ஆகுது. இருந்தாலும் மாலை வேளையில் காஸ்ட்யூம் மாற்றி கொடுத்து பாக்கலாம்னு சொல்லி அதன் பின் நடிக்க வைத்தார்" என அவர் பங்குக்கும் நயன்தாராவை பற்றி கூறி புகைச்சலை கிளப்பி இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள், நயன்தாராவிற்கு யாரோ சிறப்பான கட்டுகளை வைத்திருப்பதாகவும், சீக்கிரமாக சிறப்பு பூஜை நடத்தினால் எல்லாம் சரியாகும் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நயன்தாராவின் நிம்மதியை கேஸ் போட்டு கெடுத்த தனுஷ்.. இவர்கள் ஈகோ சண்டையில் பாவமாக சிக்கிய நெட்பிளிக்ஸ்..!