×
 

ரத்னாவுக்காக ஷண்முகம் எடுத்த சபதம்! வெங்கடேஷ் சிக்க போவது எப்படி? அண்ணா சீரியல் அப்டேட் !

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா இந்த சீரியலின் இன்றைய அப்டேட் குறித்து பார்ப்போம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சூழ்ச்சியால் ரத்னா அவமானப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ரத்னா அறிவழகனுடன் வெளியே வந்ததால் ஊர் மக்கள் அவளை தப்பாக பேசுகின்றனர். ஷண்முகம் என் தங்கச்சி தப்பு பண்ணி இருக்க மாட்டா என்று சொல்கிறான். 

சௌந்தரபாண்டி ஊர் மக்கள் எல்லாரும் பாத்தாச்சு.. இனிமேலும் எதுவும் செய்ய முடியாது என சொல்ல எங்க புள்ளைங்க ஒழுக்கமா இருக்கனும்னு தான் ஸ்கூலுக்கு அனுப்பறோம். டீச்சரே இப்படி இருந்தா எப்படி என ஸ்கூலை இழுத்து மூட சொல்கின்றனர். 

ஷண்முகம் என் தங்கச்சி உத்தமினு இந்த ஊர் முன்னாடி நிரூபித்து திரும்பவும் ஸ்கூலை திறந்து அவளை ப்ரின்ஸிபலா உட்கார வைக்கிறேன் என்று சவால் விடுகிறான். வீட்டிற்கு வந்த ரத்னா நடு வீட்டில் உட்கார்ந்து என் மேல இப்படி ஒரு பழியை போட்டுட்டாங்களே என்று கண் கலங்குகிறாள். 

இதையும் படிங்க: இசக்கியிடம் சிக்கிய வெங்கடேஷ்; அசிங்கப்பட போகும் ரத்னா! இன்றைய அண்ணா சீரியல் அப்டேட்!

டீ குடிக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் நான் நல்லா தான் இருந்தேன். அதுக்கு அப்புறம் தான் எனக்கு எதுவும் தெரியல, எனக்கு என்னமோ டீ கொண்டு வந்து கொடுத்தவன் மேலே தான் சந்தேகமா இருக்கு என்று சொல்ல முத்துபாண்டியும் சண்முகமும் கிளம்பி செல்கின்றனர். 

டீ கடைக்காரனிடம் விசாரிக்க அவன் பீகார் பையன் எனவும் ரூமில் தான் இருக்கிறான் என்று தெரிய வருகிறது. இருவரும் ரூமுக்கு வந்து கதவை தட்ட அதற்குள் வெங்கடேஷ் தகவல் கொடுத்து அந்த பையனை தப்பிக்க வைக்கிறான். 

இதனால் ஷண்முகம், முத்துப்பாண்டி ஏமாற்றம் அடைகின்றனர், இந்த விஷயம் அறிந்து வெங்கடேஷ் நிம்மதி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

இதையும் படிங்க: குல்பியால் சிக்கிய முத்துப்பாண்டி - இசக்கி; ரத்னாவுக்கு எதிராக நடக்கும் சதி - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட் !

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share