சாய்ப்பல்லவியை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா சோப்ரா.. கம் பேக் கொடுத்து அசத்தல்..!
இந்திய சினிமா நடிகைகளை சம்பளத்தில் பின்னுக்கு தள்ளி இருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.
பாலிவுட் மற்றும் கோலிவுட் சினிமாக்களில் நடிகைகள் வாங்கும் சம்பளத்தில் யார் அதிகம் பெறுகிறார்கள் என்ற போட்டி தற்பொழுது ரசிககிர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதன்படி நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் தான் சம்பளத்தில் முதன்மையான இடத்தில் இதுவரை இருந்தனர். அவர்களை பின்னுக்கு தள்ளி தற்பொழுது சம்பளத்தில் முதன்மையாக இருக்கும் ஹீரோயின் என்ற பெருமையை சமீபத்தில் தட்டி சென்றவர் தான் நடிகை சாய்ப்பல்லவி. தற்பொழுது அவரையும் ஒருவர் பின்னுக்கு தள்ளி இருக்கிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு வரை தனது சம்பளத்தை ரூ.5 கோடியாக மட்டுமே வைத்திருந்த நடிகை சாய்பல்லவி, 'அமரன்' படத்திற்குப் பின்பு தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்த சாய்பல்லவி, தற்பொழுது பாலிவுட்டில் ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு அவர் சம்பளமாக ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் பேசி நடித்து இருக்கிறார். இப்படி அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் வரிசையில் பார்க்கும் பொழுது தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார் சாய்பல்லவி.
இதையும் படிங்க: பிரியங்கா சோப்ராவுக்கு ஏமாற்றம்... இறுதி நிமிடங்களில் மாறிய முடிவு!!
தனது முதல் இடத்தை பறிகொடுத்து மூன்றாவது இடத்தில் நிற்கும் நடிகை நயன்தாரா, தற்பொழுது 'டெஸ்ட்' என்கின்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் "மூக்குத்தி அம்மன்" இரண்டாவது பாகத்தில் இவர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதனை அடுத்து இப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ.15 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார்.
நயன்தாராவை போல தற்பொழுது கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை கியாரா அத்வானி. இந்த நிலையில் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வரும் இவர் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதற்கு பின்பு தற்பொழுது கன்னடத்தில் உருவாகும் 'Toxic' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக அவர் ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்கி நயன்தாராவின் இடத்தை பிடித்து இருக்கிறார்.
தற்பொழுது கர்நாடகாவில் பிரச்சனையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் "ராஷ்மிகா மந்தனா" சம்பளத்தில் நான்காவது இடத்தை பெற்று இருக்கிறார். சினிமாவில் அனைத்து நடிகர்களுடனும் நடித்து வருகின்ற நடிகை ராஷ்மிகா, தற்பொழுது பாலிவுட்டில் சல்மான் கானுக்கு ஜோடியாக "சிக்கந்தர்" என்ற படத்தில் நடித்து உள்ளார். தற்போதைய நிலவரப்படி இப்படத்திற்காக அவர் ரூ.13 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.
எப்பொழுதும் சம்பளத்திலும் சரி...படத்திலும் சரி...டாப் நம்பர் ஒன்னாக இருந்த நடிகை திரிஷா, தற்பொழுது சம்பளத்தில் பின்தங்கி.. நடிப்பிலும் பின்தங்கி, 'ஐந்தாவது' இடத்தை பிடித்து இருக்கிறார். 90களில் கனவு நாயகியாக திகழ்ந்த திரிஷா தற்பொழுது 96 படத்திலும், லியோ படத்திலும், விடாமுயற்சி படத்திலும் நடித்து இன்றைய இளசுகளையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார். இப்படி இருக்க, இவர் தற்போது 'விஸ்வம்பரா' என்ற படத்திற்காக ரூ.12 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். இப்படி நடிகைகளின் வரிசைகளில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார் நடிகை திரிஷா.
ஆறாவது இடத்தில் இருப்பது நடிகை சமந்தா. எப்படி நடிகை அனுஷ்கா உடல் நலம் பாதிக்கப்பட்டு சினிமாவிலிருந்து விலகி இருந்தாரோ அதேபோல் மனநிலை பாதிக்கப்பட்டு சினிமாவுக்கே சிறிது காலம் இடைவெளி விட்டவர் தான் நடிகை சமந்தா. தனது திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற்று வெளியே வந்த நடிகை சமந்தா, சிறிது நாட்கள் படம் நடிக்காமல் தற்பொழுது மீண்டும் படத்தை நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். மேலும் இவரது தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தின் டைரக்டரான நந்தினிக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்து இருக்கிறார் என கூறப்பட்டது. அதே வேளையில் சமீபத்தில் வெளியான "சிட்டா பெல்" வெப் தொடருக்கு ரூ.10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.
இப்படி இவர்கள் அனைவரும் தொடர்ந்து பல படங்களில் நடித்தே இத்தனை கோடி சம்பளம் பெற்று வருகின்றனர், ஆனால் தொடர்ந்து ஆறு வருடங்களாக சினிமா துறையில் நடிக்காமல் முற்றிலுமாக குடும்ப வாழ்க்கையை கையில் எடுத்த பிரியங்கா சோப்ரா.அமெரிக்காவில் கணவர் பாடகர் நிக் ஜோனஸ் உடன் செட்டில் ஆகி மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இனி இவர் படத்தில் நடிக்கமாட்டார் போல என ரசிகர்களை கவலையில் இருக்க தற்பொழுது மீண்டும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்காக சம்பளத்தில் சிக்ஸர் அடித்தும் இருக்கிறார்.
அதன்படி, தற்பொழுது 'ராஜமௌலி' இயக்கத்தில் 'மகேஷ் பாபு' நடிக்கும் படத்தில் 'பிரியங்கா சோப்ரா' ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக பிரியங்கா ரூ.30 கோடி சம்பளமாக பெற்று இருக்கிறார். இதன் மூலமாக இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ஹீரோயின்கள்... சம்பளத்தை உயர்த்தியதால் வேதனையில் தயாரிப்பாளர்கள்..!