×
 

அஷ்வத் மாரிமுத்துவை அழவைத்த நடிகர் விஜய்.. இப்படி பண்ணிட்டாரே.. போஸ்ட் போட்டு இயக்குனர் கதறல்..!

டிராகன் பட வெற்றிக்கு பிறகு நடிகர் விஜயை சந்தித்து இருக்கிறார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து.

பத்து வருட தொடர் உழைப்பு, கல்லூரியில் கண்ட கனவை அடைய எடுத்த கடுமையான முயற்சி, அவமானம் என பலவற்றை கடந்து இன்று உழைப்பால் உருவான தனது இரண்டாவது படத்திலேயே, பலரது பாராட்டையும் பெற்று கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்தும் பல இயக்குனர்களின் வரவேற்பையும் பெற்ற இயக்குனராக வலம் வருபவர் தான் அஷ்வத் மாரிமுத்து. ஆனால் எல்லோரும் அவரை பாராட்டினாலும், விதை பிரதீப் ரங்காகத்தானும், AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம் போட்டது என அனைவரும் கூறுவர்.

AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரி, விஜே சித்து, ஹர்ஷத்கான், மிஸ்கின் உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர். அட்டகாசமான இப்பத்தை சிறப்புக்காட்சியில் முதலில் பார்த்து வாழ்த்து கூறியவர் நடிகர் சிம்புதான்.

அவரை தொடர்ந்து, படம் வெளியான பின்பு இயக்குநர் சங்கரும், தனது எக்ஸ் தளத்தில், "டிராகன் திரைப்படம் ஒரு அழகான படம். இது போன்ற ஒரு படத்தை கொடுத்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுக்கு ஹாட்ஸ் ஆஃப். படத்தில் நடித்த அனைவரும் தனது கதாபாத்திரத்தை அருமையாக நடித்திருந்தனர்.படத்தின் கடைசி 20 நிமிடங்கள் என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. உலகத்திற்கு தேவையான கருத்துக்களை படத்தில் அற்புதமாக இயக்குநர் காட்டியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனியின் கடைசி கோரிக்கை.. தவெக தலைவர் விஜய் நிறைவேற்றுவாரா..?

இப்படி பலரது பாராட்டுகளை பெற்ற இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டு இருந்தார். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில், தனது தாய் மற்றும் தந்தை உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கீழ், "நான் டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்ட, எனது பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனதற்காகவும், அடங்காத என்ஜினியரிங் மாணவனாக இருந்ததற்காகவும் தற்பொழுது பெற்றோரிடம் நான் கேட்கும் மன்னிப்பு தான் இந்த டிராகன் படம்" என்று குறிப்பிட்டு இருந்தார். இது பலராலும் பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து, டிராகன் படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது, பேசிய இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து தெலுங்கில் பிரபல நடிகரான மகேஷ் பாபுவிற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். என்னவெனில் தான் இயக்கிய "ஓ மை கடவுளே' படம் வெளியான போது அப்படத்தை பார்த்த நடிகர் மகேஷ்பாபு அதனை பாராட்டி ஒரு ட்வீட் போட்டார். அதனை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்த்து கொண்டாடினர். அதேபோல், 'டிராகன்' படத்தையும் அவர் பார்க்க வேண்டும், நிச்சயமாக இந்த படமும் அவருக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

இப்படி இருக்க, அஷ்வத் மாரிமுத்துவின் அடுத்த படமான "காட் ஆஃப் லவ்" படத்தை குறித்து சிம்புவிடம் அவர் பேசிவருவதாக பலரும் வதந்திகளை பரப்ப அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, "தயவுசெய்து என் அடுத்த படங்களின் லைன்அப் பற்றி வதந்திகள் பரப்பாதீங்க. எதாவது இருந்தால் நானே முதல் ஆளாக அறிவிக்கிறேன். நன்றி" என தனது இணைய தளத்தின் வாயிலாக பதிவிட்டு இருந்தார் அஷ்வத் மாரிமுத்து. 

இந்த நிலையில், நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த அஷ்வத் மாரிமுத்து, அவருடன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை எழுத்துக்களால் பகிர்ந்து இருக்கிறார். அதில், "விஜய்யை பார்த்ததும் எனது கண்கள் கலங்கிவிட்டது எனவும் அவருடன் படத்தில் பணியாற்ற வேண்டும் என்று தான் கடினமாக உழைத்து வந்ததாகவும், அவருடன் பணியாற்றுவது என் கையில் இல்லை, ஆனால் அவரை சந்தித்துவிட்டேன். அவர் எதிரில் அமர்ந்த போது முதலில் என் கண்களில் கண்ணீர் தான் வந்தது. அதை விட என்னை பார்த்து "GREAT WRITING BRO" என விஜய் சொன்னார். அது போதும் எனக்கு இனி சினிமாவில் உயர்ந்துவிடுவேன்" என பதிவிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், விஜய் அரசியலுக்கு வந்தால் நன்றாக தான் இருக்கும், ஆனால் உலக நாயகன் கமல்ஹாசன் போல் படத்திலும் நடித்து கொண்டே அரசியலிலும் ஈடுபட்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அன்று போக்கிரி பொங்கல்; இன்று ஜனநாயகன் பொங்கல்... வெளியானது புதிய அப்டேட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share