சிறைக்குள் கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைக்கிறது? நீதிமன்றத்தில் அரசு அளித்த விளக்கம்..!
சிறை வளாகத்திற்குள் கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைக்கிறது என்பது தொடர்பாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சிறை வளாகத்திற்குள் கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைக்கிறது என்பது தொடர்பாக டிஐஜி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
இதையும் படிங்க: சீரியஸ் ரேப்பிஸ்ட் கைது..! சிறுமிகளை மட்டும் குறிவைத்து சிதைக்கும் சைக்கோ..!
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் கைதிகளுக்கு எப்படி செல்போன் கிடைக்கிறது? அதனை எப்படி பதுக்கி வைக்கின்றனர்? சிறையில் ஜாமர் இல்லையா என கேள்விகளை எழுப்பினர். மேலும், சிறைக்காவலர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சிறைக்குள் எப்படி கொண்டு செல்ல முடியும் என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் கழிவுநீர் குழாய் உள்ளிட்ட இடங்களில் மறைத்து வைத்து செல்போன் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சிறைக்குள் எப்படி செல்போன் கொண்டு செல்லப்படுகிறது என்பது தொடர்பாக வேலூர் சிறைத்துறை டிஐஜி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
சிறைக்குள் செல்போன் பயன்படுத்துவது அபாயகரமான சூழல் என தெரிவித்த நீதிபதிகள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை...