×
 

சாமுண்டீஸ்வரியால் கடுப்பாகும் ரேவதி? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியலில், கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கார்த்திக் - ரேவதி இருவரும் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு விருந்துக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, இருவரையும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்ற பரமேஸ்வரி பாட்டி இருவரையும் உட்கார வைத்து விருந்து வைக்கிறார். ரேவதி சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவ சென்ற சமயத்தில் பார்ட்டி கார்த்தியிடம் எப்படியாவது நீங்க சேர்ந்து வாழணும் என்று சொல்கிறாள். ரேவதி இதை கேட்டு விடுவாளா என்ற பில்டப் ஒரு பக்கம் எகிறிகிறது. 

அடுத்ததாக பிளாஷ்பேக்கில் பாட்டி ரேவதியை தனியாக அழைத்து அவன் எதையும் பிளான் பண்ணி எல்லாம் செஞ்சா மாதிரி தெரியல. இந்த கல்யாணம் நடக்க உங்க அம்மா தானே காரணம்? அவள் மேல கோபப்படாத வாழ்க்கையை வாழ பாரு என்று அறிவுரை வழங்குகிறாள். 

இருவரும் விருந்து முடித்துவிட்டு வீட்டுக்கு வருகின்றனர். சாமுண்டீஸ்வரி கார்த்தியை அழைத்து என்ன மாப்ள விருந்து எல்லாம் எப்படி இருந்துச்சு என விசாரிக்கிறாள். உன்னிடம் உங்கள பாக்க அமெரிக்காவில் இருந்து என் பிரண்டு ஒருத்தி வரா என்று சொல்ல ரேவதி கடுப்பாகிறாள். 

இதையும் படிங்க: ஷாக் கொடுத்த சாமுண்டீஸ்வரி... பதறும் அபிராமி.. என்ன நடந்தது? கார்த்திகை தீபம் அப்டேட்!

சாமுண்டீஸ்வரி கல்யாணம் நடந்து முடிஞ்சா சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு வராதவங்க நான் வந்து பார்க்க தான் செய்வாங்க என்று சொல்லி ரேவதியின் வாயை அடக்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

இதையும் படிங்க: வேலையை காட்டிய மூலிகை பால்! கார்த்தியை நம்ப மறுக்கும் ரேவதி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share