எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு..!
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை ஒத்திவைப்பட்டது.
வக்பு வாரிய திருத்தம் உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மும்மொழி கொள்கை, மக்களவை தொகுதி மறுவரையறை, மணிப்பூர் கலவரம் உட்பட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. எனவே இன்றைய அமர்வு மிகவும் பேசுபொருளாக மாறி உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடந்து முடிந்தது. முதல் நாளில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். தொடந்து பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி..? வைகோ சொன்ன பளிச் பதில்..!
பின்னர் நடைபெற்ற குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவியது.
இந்த நிலையில், இன்று பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட அமர்வு நேற்று தொடங்கியது. மொழி கொள்கை விவகாரம் வீரியமெடுத்த நிலையில், திமுக எம்.பிக்கள் மற்றும் மத்திய அமைசார்வைக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்தி திணிப்பு, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்காததை கண்டித்து திமுக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது.
இதையும் படிங்க: இந்தி எதிர்ப்பு போராட்டம்.. வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு சென்றால்... எச்சரிக்கும் தொழில் அமைப்பு!