பண கொழுப்பு அதிகம்... விஜய்க்கு சீமான் சொன்ன குட்டிக்கதை... என் கூட்டணி இவர்களுடன் மட்டும்தான்..!
என் நாடு, என் மக்கள், என் இடம், என் காடு, என் மண். இதில் எதை எப்படி செய்தால் எப்படி வரும் என்று தெரியாத நான் அப்புறம் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?
''வியூக வகுப்புகள் எல்லாம் எனக்கு பிடிக்காது. இந்த நாட்டை ஆட்சி செய்த எங்கள் முன்னேற்கள் எல்லாம் வியூகம் வகுக்கவில்லை'' என விஜய் குறித்து விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இதுகுறித்து பேசிய அவர், ''வியூக வகுப்புகள் எல்லாம் எனக்கு பிடிக்காது. இந்த நாட்டை ஆட்சி செய்த எங்கள் முன்னேற்கள் எல்லாம் வியூகம் வகுக்கவில்லை. எங்கள் தாத்தா பெருந்தலைவர் காமராஜரோ, பேரறிஞர் அண்ணா போன்ற பெருந்தகைகளோ, அதற்கு முன்பிருந்த குமாரசாமி ரெட்டியாரோ இப்படி வீயூக வகுப்பாளர்களை வைத்துக்கொண்டதில்லை. என் நாடு, என் மக்கள், என் இடம், என் காடு, என் மண். இதில் எதை எப்படி செய்தால் எப்படி வரும் என்று தெரியாத நான் அப்புறம் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?
ஜெயங்கொண்டத்தில் யாரை நிறுத்தினால் வெல்லலாம், அரியலூரில் யார், ஸ்ரீபெரும்புதூரில் யார்? இது கூட தெரியாமல் நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? எனக்கு நிறைய மூளை இருக்கிறது, காசு தான் இல்லை, அதனால் எனக்கு அது தேவையில்லை. கத்திரிக்காய் என்று தாளில் எழுதி பிரயோஜனம் இல்லை. நிலத்தில் இறங்கி விதையை போட்டு, செடி முளைக்க வைத்து, தண்ணீரை ஊற்றி, உரத்தை வைத்து, விளைய வைத்து, வாழ வைக்க வேண்டும். அப்பொழுதுதான் கத்திரிக்காய் வரும். மேசையில் உட்கார்ந்து கத்திரிக்காய், சுரக்காய் என்று சொல்வதில் பிரயோஜனம் இல்லை.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவை வலிமைப்படுத்துவது ஏன்.? திமுகவை விளாசி தள்ளிய சீமான்..!
குறிப்பிட்ட காலமாய் இந்த நோய் வந்துவிட்டது. பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டில் என்ன தெரியும்? எத்தனை ஆறு, எத்தனை ஏரி, எத்தனை குளம், எத்தனை சமூக மக்கள், அந்தந்த சமூக மக்களுக்கு இருக்கிற பிரச்சனை என்ன என்பதெல்லாம் பிரசாந்த் கிஷோருக்கு என்ன தெரியும்? தெரியுமா சிலருக்கு உடலில் கொழுப்பு என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். பணக் கொழுப்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? சிலர் வசனம் சொல்லுவார்கள் உனக்கு வாய் கொழுப்பு அதிகம் என்று... இந்த கொழுப்பு அதிகம், அந்த கொழுப்பு அதிகம் என்பார்கள். அது மாதிரி இது பணக்கொழுப்பு.
பணம் அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். அதைப் பற்றி பேசி காலத்தையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம். பிரச்னையோடு, கவலையோடு, கண்ணீரோடு வீதியில் நின்று போராடுகிற எல்லா மக்களோடும் நான் கூட்டணி வைத்து இருக்கிறேன். அப்போது நான் தனித்து இல்லையே. நான் தலைவர்களை நம்பி கட்சி ஆரம்பித்தவன் அல்ல. தமிழர்களை நம்பி கட்சி ஆரம்பித்தேன். எனக்கு கீழ் இருக்கக்கூடிய இளைய தலைமுறையை நம்பி கட்சி ஆரம்பித்தேன். தம்பி- தங்கைகளை நம்பி கட்சியை ஆரம்பித்தேன். ஆகையால் என்னை ஒருவனையாவது விட்டு விடுங்கள்.
இந்த சாமி இந்த சாதிக்கு, அந்த சாமி இந்த சாதிக்கு, இந்த சுடுகாடு இந்த சாதிக்கு, இந்த கோவில் இந்த சாதிக்கு என்று இருக்கிறது அல்லவா? என்னையாவது பொதுவாக விட்டு விட்டீர்கள் என்றால் நல்லது. இந்த தமிழ்நாட்டில் எல்லா தலைவர்கள், முன்னோர்கள் சிலைகளுக்கும் மாலை போட்டுவிட்டு எல்லாராலும் இறங்கி வந்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா? என் ஒருவனால் மட்டும் தான் முடியும். ஏனென்றால் நான் ஒருவன் மட்டும் தான் தமிழ் தாயின் மகனாக இருக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் சாதி சார்ந்து, மதம் சார்ந்து தமிழர்களை சுருக்கி விட்டார்கள்.
பாரதிதாசனைக் கூட சாதி குறியீடு வைத்து தான் பேசுகிறார்கள். காமராஜர் என்றால் அது ஒன்று... தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்றால் அது ஒன்று... எல்லோரையும் சாதிக் குறியீடாக வைத்து முடக்கி விட்டார்கள். எங்களுக்கு ஒரு கெடுவாய் எங்கள் அண்ணன் தமிழரசன் போன்றவர்களும் இருக்கிறார்கள். அவர்களை போன்றோர் இல்லை என்றால் நீண்ட நாள் வாழ முடியாது. சா என்று ஆரம்பித்தாலே சாவுடா என்று முடித்து இருப்பார்கள். என்ன செய்வது எங்களைப் போன்ற எளிய பிள்ளைகள்தான் அல்லாடி கொண்டு இருக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீமான் அடித்த பல்டியை பார்த்து எனக்கே வெட்கக்கேடா இருக்கு... ஜெயக்குமாரையும் தெறிக்கவிட்ட டிடிவி தினகரன் விமர்சனம்...!