ஆத்தாடி...! இனி தங்கத்தை கையால் கூட தொடமுடியாது போலயே... விண்ணை முட்டும் விலை உயர்வு!
தங்கம் விலை முதல் முறையாக சவரனுக்கு 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது நகை பிரியர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை முதல் முறையாக சவரனுக்கு 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது நகை பிரியர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புத்தாண்டின் தொடக்கம் முதலே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. என்றாவது ஒருநாள் சற்றே குறைந்தாலும் மறுநாளே இருமடங்காக உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் முறையாக தங்கம் விலை சவரனுக்கு 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
தங்கம் விலை:
சென்னையில் இன்று (புதன் கிழமை) சில்லறை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் கிராமிற்கு 95 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 905 ரூபாய்க்கும், சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்து 63 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இதையும் படிங்க: Gold Rate Chennai: ஒரே நாளில் இப்படி உல்ட்டா ஆகிடுச்சே... நடுத்தர மக்களை நடுங்க வைக்கும் தங்கம் விலை!
அதேபோல் 24 காரட் சுத்த தங்கம் கிராமிற்கு 103 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 623 ரூபாய்க்கும், சவரனுக்கு 824 ரூபாய் அதிகரித்து 68 ஆயிரம் 984 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை:
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் அதிகரித்து 107 ரூபாய்க்கும், கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை உயரக் காரணம் என்ன?
அமெரிக்க அரசாங்கத்தின் கட்டணக் கொள்கைகள், குறிப்பாக சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீதானவை, பணவீக்கமாகக் கருதப்படுகின்றன. முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பாக மாற்றுகிறார்கள். இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதும் தங்கத்தின் விலை உயர மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Gold Rate In Chennai: ஒரே நாளில் இவ்வளவு சரிவா? - சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை!