×
 

தலையில் இடியை இறக்கிய தங்கம்... வாரக்கடைசி நாளில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு...! 

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 64 ஆயிரத்து 360 க்கும் விற்பனையாகி வருகிறது. 

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 64 ஆயிரத்து 360 க்கும் விற்பனையாகி வருகிறது. 

வாரத்தின் தொடக்கம் முதலே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை, நேற்று 360 ரூபாய் சரிந்து அனைத்து தரப்பு மக்களையும் மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கம் விலை சரிந்துள்ளது நகை வாங்க காத்திருப்போரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நேற்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,045 ரூபாய்க்கும், சவரன் 64,360 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: அடிதூள்... ஒரே நாளில் சரசரவென சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு இவ்வளவு குறைவா?

தங்கம் விலை நிலவரம் (22/02/2024): 

இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 20 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 045 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 64 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

இன்றைய வர்த்தகத்தின் போது 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமிற்கு 22 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 776 ரூபாய்க்கும், சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்து 70 ஆயிரத்து 208 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 

வெள்ளி விலை: 

தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளி விலை இன்று சரிந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து 108 ரூபாய்க்கும், கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து  8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் எடுத்து வரும் வரி விதிப்பு நடவடிக்கைகள், வர்த்தகப் போர் அபாயம் ஆகியவற்றால் உலக அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கம் விலையானது உச்சம் தொட்டு வருகிறது. தங்க நகை வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் கூட ஓரிரு நாட்களில் விலை குறையும் என காத்திருந்தால் தொடர்ந்து விலையேறி ஷாக் கொடுத்து வருகிறது.


 

இதையும் படிங்க: தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கி.. தங்கம் மீது முதலீடு செய்யலாமா? வேண்டாமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share