×
 

25 தொகுதி வேண்டும்... திமுகவை திணறடிக்கும் திருமா கட்சி... ஆதவ் அர்ஜூனாவுக்காக ஆதங்கப்படும் விசிக..!

அதற்கான வாய்ப்பை ஆதவ் அர்ஜுனா உருவாக்க​வில்லை. விலகு​வதாக அறிவித்து விட்​டார். அவர் விலகியது வருத்​தமளிக்​கக்​கூடியது​தான்​.

விசிக-வில் இருந்துகொண்டு ‘ஆட்சி - அதிகாரத்தில் பங்கு’ என ஒரு பிரளயத்தை உருவாக்கியவர் ஆதவ் அர்ஜுனா. இடைநீக்கம் செய்யப்பட்ட அவர் விலகு​வதாக அறிவித்து விட்​டார். ஆனால், அவரது விலகல் விசிகவில் உள்ள பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வி.சி.க உணர்வாளர்கள் ஆதவ் அர்ஜூனாவுக்கு ஆதரவு தருகிறார்கள்.

இந்நிலையில், ‘‘விசிக-வுக்கு 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்டும்’’ என விசிக துணை பொதுச் செயலர் வன்னி அரசு தெரிவித்துள்ளது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. 

வன்னியரசு கூறுகையில், ‘‘1999-ல் விசிக தேர்தல் பாதைக்கு வந்த​போதே ‘எளிய மக்களுக்​கும் அதிகாரம், கடைசி மனிதனுக்​கும் ஜனநாயகம்’எனச் சொன்​னார் திரு​மாவளவன். இதுதான் 2016-ல் ‘ஆட்​சி​யிலும் பங்கு, அதிகாரத்​தி​லும் பங்கு’ என்ற எங்கள் கோட்​பாடாக மாறியது. இதைத்​தான் ஆதவ் அர்ஜுனா​வும் பேசி​னார். இதைத்​தான், “ஆதவ்​வின் இந்த கருத்து தவறான கருத்து இல்லை. கட்சி​யின் நிலைப்​பாடு தான்” என்று தலைவரும் சொன்​னார். அந்த நிலைப்​பாட்​டில் விடுதலை சிறுத்​தைகள் எப்போதும் உறுதியாக இருக்​கிறோம்​.

இதையும் படிங்க: 2026ல் -கனவு காணும் எடப்பாடியார்..! கருகும் இலை... கூட்டணிக்கு என்ன விலை..?

‘இதையெல்​லாம் பேசவேண்​டாம்’ என தலைவர் சொன்னதை மீறி புத்தக வெளி​யீட்​டில் ஆதவ் அர்ஜூனா பேசி​னார். அப்படி கட்டுப்​பாட்டை மீறிய​தால் தான் அவர் சஸ்பெண்ட் செய்​யப்​பட்​டார். பொதுவாக கட்சியி​லிருந்து இப்படி இடைநீக்கம் செய்​யப்​படு​பவர்கள் அதுகுறித்து விளக்​கமளிப்​பார்​கள். அதை உயர்​மட்​டக்​குழு பரிசீலித்து மீண்​டும் இணைத்​துக் கொள்​ளப்​படு​வார்​கள். ஆனால், அதற்கான வாய்ப்பை ஆதவ் அர்ஜுனா உருவாக்க​வில்லை. விலகு​வதாக அறிவித்து விட்​டார். அவர் விலகியது வருத்​தமளிக்​கக்​கூடியது​தான்​.

அங்கீகரிக்கப்பட்ட கட்சி, 2 எம்பி-க்கள், 4 எம்எல்ஏ-க்கள் என அரசியலின் உச்சத்தில் இருக்கிறது விசிக. ​விசிக-​வின் இந்தப் பயணம் சாதா​ரண​மானது அல்ல. குரு​தி​யாற்றை கடந்து பயணித்து இந்த இடத்தை அடைந்​திருக்​கிறோம். இப்போது நாங்கள் வலிமைமிக்க அங்கீகரிக்​கப்​பட்ட கட்சி​யாகி​யிருக்​கிறோம்.

இப்போது தமிழகத்​தின் திசைவழியை தீர்​மானிக்​கும் சக்தியாக உள்ளோம். 10 ஆண்டு​களுக்கு முன்பு விசிக-வை கூட்​ட​ணி​யில் சேர்த்​தால், தலித் அல்லாதவர்கள் வாக்​களிக்க மாட்​டார்கள் என்ற எண்ணவோட்டம் இருந்​தது.

அதனை மாற்றி இப்போது விசிக இருக்​கும் கூட்​ட​ணியே வெற்றி​பெறும் என்ற சூழலை உருவாக்கி​யுள்​ளோம். 2026-ல் திமுக கூட்​ட​ணியிலேயே தொடர்​வோம் என திரு​மாவளவன் கூறி​யுள்​ளார். என்னைப்​போன்ற கடைநிலை தொண்​டர்​களின் மனநிலை என்னவென்​றால், 2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெறவேண்டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்

​.

விசிக-வில் உள்ள அனைவரின் விருப்பமுமே எங்கள் தலைவரை முதல்வராக்க வேண்டும் என்பதுதான். எதார்த்த சுழலில் ஒரு தலித் முதல்வராக முடியாது என எங்கள் தலைவர் சொல்கிறார். ஆனால், இன்று அவரை தலித் தலைவராக பார்க்காமல், பொதுத்தலைவராக மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். எனவே, அவருக்கான உயரத்தை அடையவைக்க நாங்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது, அதற்காக உழைக்க ஆரம்பித்துவிட்டோம்.

இந்திய அளவில் மாநில உரிமைகள், மக்கள் உரிமை, திட்டங்கள் என எல்லாவற்றிலும் ரோல்மாடலாக உள்ளது திமுக ஆட்சி. மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம் போன்ற பல முன்னோடி திட்டங்களை இந்த ஆட்சி நடைமுறைப்படுத்தியுள்ளது. 

ஒரு மாநில கட்சியாக மக்களை பாதுகாக்க ஒன்றிய அரசோடு உரிமையோடு சண்டையிட்டு மாநில உரிமைகள், நிதிபங்கீட்டை போராடிப் பெறுவதில் சரியாக செயல்பட்டு க்கொண்டிருக்கிறது. அதேசமயம் மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறியுள்ளதா என்றால் அது இல்லை. வரும் காலத்தில் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை'' எனத் தெரிவித்துள்ளார்.

கூட்டணிக்குள் இருந்து கொண்டே திமுக ஆட்சியை விமர்சிப்பதும், அதிக தொகுதிகளை பெற வேண்டும் என வன்னியரசு பேசியிருப்பதை திமுக உற்று நோக்கி வருகிறது. முதலில் ஆதவ் அர்ஜூனாவை பேசவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். இப்போது அக்கட்சியின் முக்கிய நிர்வாகி வன்னியரசுப் அதையே பேசுகிறார். திருமாவளவனுக்கு தெரியாமலா இதெல்லாம் நடக்கிறது? என திமுகவினர் நகத்தைக் கடிக்கின்றனர்.
 

இதையும் படிங்க: முனிவரே, எடப்பாடியாருக்கு புத்தி சொல்லு... சக்தி வேண்டி அலையும் ஓபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share