ஈஷாவுக்கு ஒரு நீதி, வெள்ளியங்கிரிக்கு ஒரு நீதியா..? கொந்தளித்த சென்னை உயர்நீதிமன்றம்!
சிவராத்திரியை முன்னிட்டு கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி வனத்துறைக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேரூர் தாலுக்காவை சேர்ந்த சரஸ்வதி மற்றும் ரங்கசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வதுண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஈஷா மையத்தில் நடக்கும் சிவராத்திரி விழாக்களுக்காக ஏராளமான வாகனங்களில் மக்கள் வருகை தருவதால் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் நடக்கும் பூஜைகளில் தங்களால் கலந்து கொள்ள முடியில்லை என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.
அதனால் சிறுவாணி சாலையில் இருட்டு பள்ளம் சந்திப்பு, முள்ளங்காடு சோதனை சாவடி வழியாக கோவிலுக்கு செல்ல மாற்று வழி பாதையை ஏற்படுத்தி தர வேண்டுமென வனத்துறைக்கு மனு அளித்துள்ளதாக கோரப்பட்டுள்ளது. செம்மேடு முதல் வெள்ளியங்கிரி சாலை வரை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தவிர வேறு எந்த வாகணத்தையும் அனுமதிக்க கூடாது என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சுங்கச்சாவடியில் ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை.. இந்த விதிகள் உங்களுக்கு தெரியுமா?
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படி வனதுறைக்கு உத்தரவிட்டார். அதே சமயம் தனி வழித்தடம் அமைத்து தர கோரி மனுதாரரின் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: வாட்ஸ் அப் மூலம் திருப்பதி தரிசன டிக்கெட்..? பக்தர்களே ஏமாற வேண்டாம்… தேவஸ்தானம் எச்சரிக்கை..!