சீர்காழி அருகே சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 140 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் பணம் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் சேர்ந்தவர் செல்வேந்திரன் இவர் சர்க்கரை ஆலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார் மருமகளின் பிரசவத்திற்காக கடந்த திங்கட்கிழமை அன்று மயிலாடுதுறை உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

பிரசவம் முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கொள்ளை பக்கம் கதவு உடைக்கப்பட்டு அறைகளிலிருந்த பீரோ மற்றும் சூட்கேஸ் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிங்க: சீமான் மீது பாய்ந்தது 60 வழக்குகள்...ஆடிப் போய் உள்ள நா.த.க!

மேலும் அதில் இருந்த 140 பவுன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருள் மற்றும் ரூபாய் 80 ஆயிரம் பணம் ஆகியவற்றை வரும் நபருக்கு கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: அடேங்கப்பா.. 210 கோடி ரூபாய் மின் கட்டணமா? அதிர்ந்து போன வியாபாரி....