இருட்டு கடை அல்வா உரிமையாளர், நெல்லை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணமான தனது மகளுடன் சேர்ந்து வாழ்வதற்கு கடையை தனக்கு உரிமையானதாக எழுதி தர வேண்டுமென மாப்பிள்ளை வீட்டார் மிரட்டுவதாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

நெல்லை இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் கவிதாசிங்கின் மகள் கோவையை சேர்ந்த தன் கணவர் பல்ராம் சிங் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளார். கணவர் பல்ராம் சிங் வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமையை கேட்பதாகவும், இருட்டுக்கடை உரிமையை மாற்றித் தரும்படி கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கவிதாசிங்கின் மகள் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: அத்துமீறும் இலங்கை கடற்படை.. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்..!
கவிதா சிங் அளித்த புகாரில் , எனது மகள் ஸ்ரீ கனிஷ்காவிற்கும் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2, 2025 அன்று தாழையத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, கனிஷ்கா தனது கணவருடன் கோவையில் வசித்து வந்தார். பல்ராம் சிங்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனை கனிஷ்கா கண்டித்ததால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த கனிஷ்கா கடந்த மார்ச் 15ம் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மறுநாள் இரவு, பல்ராம் சிங்கும், அவரது குடும்பத்தினரும் கவிதா சிங்கின் வீட்டிற்கு வந்து, கனிஷ்காவுடன் நல்ல முறையில் வாழ வேண்டுமென்றால் கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என்றும், நெல்லையில் இயங்கி வரும் இருட்டுக்கடை கடையை பல்ராம் சிங்கின் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்றும் மிரட்டினர்.

தனது மகளின் எதிர்காலத்தைக் கருதி இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்த கவிதா சிங், பின்னர் பல்ராம் சிங் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்டியதால், தனது உயிருக்கும், தனது பெற்றோருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, தனது கணவர் பல்ராம் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவித்துளனர்.