நடிகர் அஜித்குமார், கிரிக்கெட்டர் அஸ்வினுக்கு பத்ம விருது.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!
தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், கிரிக்கெட்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்பட 113 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகளிலும், துறைகளிலும் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 139 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
இந்த ஆண்டு 7 பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம விபூஷண் விருதுகள், 113 பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 23 பெண்கள். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த தொழில் துறையில் பங்காற்றிய நல்லி குப்புசாமி, கலைத் துறையில் நடிகர் அஜித் குமார், சோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த வேலு ஆசான் குருவாயூர் துரை (கலை), கே.தாமோதரன் (சமையற்கலை), லட்சுமிபதி ராமசுப்பையர் (இதழியல்), எம்.டி.ஸ்ரீனிவாஸ் (அறிவியல் - கட்டிடக் கலை), புரசை கண்ணப்ப சம்பந்தன் (கலை), ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி (கலை) மற்றும் ஸ்ரீனி விஸ்வநாதன் (இலக்கியம் - கல்வி) ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாநில அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்துள்ளது - மு.க.ஸ்டாலின்