×
 

#Breaking: மகா கும்பமேளாவில் மளமளவென பற்றி எரியும் தீ… தீயணைப்புப் படையினர் மும்மரம்..!

மகாகும்பத்தின் செக்டார்-22 பகுதி சட்நாக் காட், ஜூசியின் நாகேஷ்வர் காட் இடையே உள்ளது. அருகில் இருந்த  பல கூடாரங்களுக்கும் இந்த தீ மளமளவென பரவியது.

மஹாகும்பத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். செக்டார்-22ல் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போதிலும், இது வரையில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. அந்த இடத்தில் கூடாரத்தில் பக்தர்கள் யாரும் இல்லாதது அதிர்ஷ்டம். தீ விபத்தை அடுத்து அனைவரும் வெளியே வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மகாகும்பத்தின் செக்டார்-22 பகுதி சட்நாக் காட், ஜூசியின் நாகேஷ்வர் காட் இடையே உள்ளது. அருகில் இருந்த  பல கூடாரங்களுக்கும் இந்த தீ மளமளவென பரவியது. இதை பார்த்த பக்தர்கள் கூடாரத்தை விட்டு வெளியே வந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல கூடாரங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. உயிர்ச்சேதம் ஏற்படாதது அதிர்ஷ்டம்.

இதையும் படிங்க: மஹா கும்பமேளாவில் திரண்ட கோடிக்கணக்கான பக்தர்கள்… கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் பலி..?!

முன்னதாக ஜனவரி 19ஆம் தேதி மகாகும்பத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. செக்டர்-19ல் கட்டப்பட்ட கீதா அச்சகத்தின் பந்தல்கள் தீப்பிடித்து எரிந்தன. பல கூடாரங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. சிலிண்டரும் வெடித்ததால், வானத்தில் புகை மூட்டம் காணப்பட்டது. எனினும் தீயணைப்பு படையினர் உரிய நேரத்தில் தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: மகா கும்பத்தின் 'வைரல் கண்ணழகி' மோனலிசா எந்த சாதி..? இந்தியாவின் நெற்றியில் பிரிட்டிஷ் காலத்தின் களங்கம்..!

அப்போது விபத்துக்குப் பிறகு, முதல்வர் யோகியும் சம்பவ இடத்திற்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்க அறிவுறுத்தினார். இதையடுத்து அங்கு இரவோடு இரவாக புதிய கூடாரங்களை கட்டி, பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

மௌனி அமாவாசை நீராடலான நேற்றும் தீ விபத்து சம்பவமும் நடந்தது. நெரிசலுக்குப் பிறகு, மகா கும்பமேளா பகுதியில் இருந்து காயமடைந்த பக்தர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ​​தீப்பிடித்தது. ஆம்புலன்ஸ் இன்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்பியதாகவும், அதன் பிறகு தீ மளமளவென ஆம்புலன்ஸ் முழுவதும் எரிந்ததாகவும் கூறப்படுகிறது. தீ விபத்தை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share