தமிழகத்தில் 21ஆம் தேதி வரை மழை! கூல் அப்டேட் கொடுத்த வானிலை மையம்
தமிழகத்தில் இன்று முதல் 21 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலத்தில், அதிக வெப்பம் காரணமாக நிலம் வறண்டு போகும் போது, மழை பெய்து அதை சமன் செய்யும். அப்படியாக, கோடை வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆங்காங்கே கோடை மழை பெய்து பூமியை குளிர வைத்தது. இந்நிலையில் இனி மழைக்கு வாய்ப்பில்லை என்றும், அடுத்தடுத்த நாட்களில் வெயில் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
தற்போது, வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மீண்டும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மழைக்கு மரத்தின் கீழ் ஒதுங்கிய மக்கள்.. மின்னல் தாக்கி பலியான சோகம்.. கள்ளக்குறிச்சியில் சோகம்..!
தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18 முதல் 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 75 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும் என்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் அரசு!