×
 

தூத்துக்குடி மக்களின் உயிர் துடிப்பு .. முத்துநகர் அதிவேக விரைவு ரயிலுக்கு வயசு இப்போ 145 ..!

145 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை புரிந்துள்ளது முத்துநகர் விரைவு ரயில் !

சென்னை மக்களையும் தூத்துக்குடி  வாசிகளையும் இணைக்கும் மிகப்பெரிய பாலமாக இருப்பது முத்துநகர் விரைவு ரயில்.தூத்துக்குடிக்கு போகணுமா அப்போ முத்துநகர் விரைவு ரயிலில் டிக்கெட் இருக்கா பாருங்க என மக்களின் முதல் தேர்வாக இருக்கும் ரயிலுக்கு இப்போ வயது 145 .சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி தனது ஓட்டத்தைத் தொடங்கியது இதே புத்தாண்டு நாளில்தான். தற்போது 145 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை புரிந்துள்ளது.தெற்கு ரயில்வே இயக்கி வரும் முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில்களில் இதற்கு முன்னணி இடமுண்டு. அது மட்டுமல்லாமல், நாட்டின் மிகப் பழமையான பயணிகள் விரைவு ரயிலாகவும் இது உள்ளது.

1880ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாளில், சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடிக்கு தனது முதல் பயணத்தைத் தொடங்கிய முத்துநகர் விரைவு ரயில், தமிழகத்தின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு மக்களைக் கொண்டு சென்றதோடு, பல்வேறு வகையான மக்களை இணைத்தப் பெருமையையும் கொண்டுள்ளது. சென்னையிலிருந்து 11 மணி நேரம் பயணித்து தூத்துக்குடி சென்றடையும்.

இந்த ரயில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல முக்கிய நகரங்களையும் இணைத்துள்ளது. சுமார் 17 நிறுத்தங்களில் இந்த ரயில் நின்று செல்லும். இந்த ரயிலில் 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்பட 21 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சும்மா ஜெட் வேகத்தில் இனி ரயில் பயணம் ..மாஸ் அறிவிப்பு வெளியிட்ட இந்திய ரயில்வே..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share