கலிபோர்னியாவில் உள்ள இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சினோ ஹில்ஸ் பகுதியில் சுவாமி நாராயணன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கோவில் போன்ற புனித தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: மான்ஸ்டர் போல் முகம் முழுவதும் முடி... அலறியடித்து ஓடிய மாணவர்கள்..!!

சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள இந்து கோவிலில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.வழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சாஸ்தா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்முறை கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள மற்றொரு கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்து சமூகம் வெறுப்புக்கு எதிராக உறுதியாக நிற்கிறது என்றும் சினோ ஹில்ஸ் மற்றும் தெற்கு கலிபோர்னியாவில் வெறுப்பை வேரூன்ற விடாமல் தடுக்க இணைந்து போராடுவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இப்படியும் ஒருத்தரா... வாழ்நாள் முழுவதும் ரத்தத்தையே கொடுத்த மாமனிதன்!!