×
 

நீங்க 2001இல்தான் எம்.எல்.ஏ... நான் 1989இலேயே எம்.எல்.ஏ.. ஓபிஎஸ் சொந்த ஊரில் மாஸ் காட்டிய இபிஎஸ்..!

பெரியகுளத்தைச் சேர்ந்த ஒருவர் (ஓபிஎஸ்), நாங்கள் துரோகம் செய்துவிட்டோம் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா இறந்து பதவி பறிபோனதும் தர்மயுத்தம் நடத்தியது யார்?

துரோகம் இழைத்த நீங்கள்தான் (ஓபிஎஸ்) தற்போது கடலில் தத்தளிக் கொண்டிருக்கிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். "எம்ஜிஆர், ஜெயலலிதா என இரண்டு  தலைவர்களையும் முதல்வர்களாக உயர்த்தியது தேனி மாவட்டம்தான். இதனால்தான், தேனி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியது. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் ஒரு திட்டம்கூட கொண்டு வரப்படவில்லை. தற்போது மக்கள் அதிமுக ஆட்சியை பொற்கால ஆட்சி என்று பாராட்டுகிறார்கள். அவ்வளவு திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொடுத்து இருக்கிறோம். ஆனால், முதல்வர் ஸ்டாலின் எப்போதும் போட்டோ ஷுட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார்.



அதிமுக ஆத்சி தற்போது பொறுப்பில் இருந்திருந்தால், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்தியிருப்போம்.
திராவிட மாடல் அரசு என்று ஸ்டாலின் அடிக்கடி கூறுகிறார். இது திராவிட மாடல் அரசு இல்லை. ஸ்டாலின் மாடல் அரசு. திமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் புழக்கம் மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. சிறுமி முதல் மூதாட்டி வரை அச்சப்படும் அளவுக்கு பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் 184 கொலைகள் நடந்துள்ளன. அதேபோல, 273 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி உள்ளன. காவல் துறை பெண் அதிகாரிக்குகூட பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.



பெரியகுளத்தைச் சேர்ந்த ஒருவர் (ஓபிஎஸ்), நாங்கள் துரோகம் செய்துவிட்டோம் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா இறந்து பதவி பறிபோனதும் தர்மயுத்தம் நடத்தியது யார்? சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க எதிர்த்து வாக்களித்தது யார்? கட்சி சின்னத்தை முடக்க, கட்சியை வீழ்த்த செயல்பட்டுக் கொண்டிருப்பது யார்? அதிமுக மூழ்கும் கப்பல் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதிமுக என்பது கரைசேரும் கப்பல், துரோகம் இழைத்த நீங்கள்தான் தற்போது கடலில் தத்தளிக் கொண்டிருக்கிறீர்கள். எப்போதும் சீனியர் என்று சொல்கிறார். உங்களைவிட நான்தான் சீனியர். 1989இல் எம்.எல்.ஏ. ஆனவன். ஆனால், நீங்கள் 2001இல்தான் எம்.எல் ஏ.. பதவி இல்லை என்றதும் துரோகம் செய்யத் தொடங்கி விட்டீர்கள். நீங்களா அதிமுக விசுவாசி?" என்று பழனிச்சாமி பேசினார்.

இதையும் படிங்க: அதிரடியாக மாறிய கூட்டணி... உறுதியானது அதிமுக+ பாமக+ தவெக+ நாதக இணைப்பு… திகிலில் ஸ்டாலின்..!

இதையும் படிங்க: அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் இணைப்பா..? இப்படி சொல்லிட்டாரே அதிமுக மூத்த தலைவர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share