×
 

சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்.. தெலங்கானாவை புகழ்ந்த ராகுல்..!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி காட்டியே தீருவோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் ஆகிறது. இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அம்மாநிலத்தில் ஓபிசி மக்கள் தொகை 56.36 சதவிகிதம் இருப்பதாக தெரிவித்து அவர்களுக்கான 42 % இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக தனது எக்ஸ் பதிவில் கூறி இருந்தார். இந்த நிலையில் தெலங்கானா அரசின் இந்த முயற்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தெலுங்கானாவில் ஓபிசி இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக காங்கிரஸ் அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. அம்மாநிலத்தில் அறிவியல் பூர்வமான சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் பெறப்பட்ட ஓ.பி.சி. சமூகத்தின் உண்மையான எண்ணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் அவர்களின் சம பங்களிப்பை உறுதி செய்வதற்காக 42% இடஒதுக்கீடுக்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார். பிற்படுத்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சமூகத்திற்கான நியாயமான உரிமை ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றும் கூறினார்.

இதையும் படிங்க: அடிக்கடி வியட்நாமுக்கு சிட்டாகப் பறக்கும் ராகுல் காந்தி.. வியட்நாம் பாசம் குறித்து பாஜக சுளீர் கேள்வி!!

இது உண்மையில் சமூக நீதியை நோக்கிய ஒரு புரட்சிகரமான படியாகும், இதன் மூலம் மாநிலத்தில் 50% இடஒதுக்கீடு என்ற சுவர் இடிக்கப்பட்டுள்ளது. சாதி கணக்கெடுப்பு தரவுகள் மூலம் ஒவ்வொரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், நல்வாழ்வை உறுதி செய்யும் கொள்கைகள் வகுக்கப்படும். இதற்காக தெலங்கானா அரசு ஒரு தனி நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகங்கள் தங்கள் உரிமைகளைப் பெற சாதி கணக்கெடுப்பால் மட்டுமே முடியும் என்று தொடர்ந்து கூறி வருவதாகவும், அதற்கு தெலங்கானா வழி காட்டியுள்ளது என்றும் இதுதான் முழு நாட்டிற்கும் தேவை. இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடக்கும் எனவும் அதை நாங்கள் செய்வோம் என்றும் உறுதிப்பட ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காங்கிரஸில் 'துரோகிகள்..!' குளவி கூட்டில் கையை வைத்த ராகுல் காந்தி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share