×
 

பட்டியாலா சிறையிலிருந்து பி.ஆர் பாண்டியன் விடுவிப்பு.. 5 நாள் சிறைவாசம் அனுபவித்த கொடுமை..!

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் பட்டியாலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் திடீரென கைது செய்யப்பட்டு 5 நாள் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று விடுதலையாகி உள்ள நிலையில், அவர் விரைவில் தமிழ்நாடு திரும்ப உள்ளார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும், சம்யுத்தா கிசான் மோர்ச்சா என்ற அரசியல் சார்பற்ற அமைப்பின் SKM (NP) தமிழக ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருபவர் பி ஆர்.பாண்டியன். தமிழக மக்கள் மத்தியில் பரிச்சயமான இவர், விவசாயம் தொடர்பான பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பதிலும், பங்கேற்பதிலும் ஆர்வம் காட்டி வருபவர் ஆவார்.

இதையும் படிங்க: கடலூரில் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு.. மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கைது..!

அந்த வகையில்  கடந்த 19ஆம் தேதி சண்டிகரில் மத்திய அரசின் அழைப்பின் பேரில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிவராஜ் சவுகான், பிரகலாத்ஜோஷி, பியூஸ்கோயல் உள்ளிட்ட அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் குறித்த பேச்சு வார்த்தையில் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றார். 

காலை 11 மணிக்கு துவங்கிய கூட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட அவரை வழிமறித்த பஞ்சாப் மாநில காவல்துறையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களோடு வந்து கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகளை கைது செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.  அன்று இரவே பட்டியாலா மத்திய சிறையில் தடுப்பு காவல் சட்டத்தின் அடிப்படையில் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் அடைக்கப்பட்டனர். 

5 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், இன்று காலை சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அவருடன் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் பிடி.ஜானும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஓரிருநாட்களில் அவர் தமிழ்நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு சென்ற தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் காரணம் சொல்லப்படாமல் கைது செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

இதையும் படிங்க: விவசாயி என்ற முறையில் சொல்கிறேன், வேளாண் பட்ஜெட் பாராட்டத்தக்க ஒன்று - வேல்முருகன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share