மதுரை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பாம்பன் பாலம் திறக்கப்பட்டதை வரவேற்கிறேன். அதேபோல வக்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். பெரும்பான்மை இருப்பதால், அதன் மூலமாக வக்பு மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். இருப்பினும், காங்கிரஸ் கட்சி எதிர்ப்பை ஆழமாகப் பதிவு செய்துள்ளது. இந்தச் சட்டம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிச்சயம் பறிக்கும். அப்படித்தான் இந்தச் சட்டத்தைப் பார்கிறோம்.

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தீர்வு ஏற்பட வேண்டும். தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்களுடன் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். இதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து இலங்கை பயனத்தின் போது பிரதமர் வலியுறுத்தினாரா என்று எனக்குத் தெரியவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி என்பது வேதனை அளிக்கிறது. அதிமுக எப்படி இருந்த கட்சி. அது சாதாரணமான கட்சியில்லை. தமிழகத்தை பல ஆண்டுகளாக ஆண்ட கட்சி.

அதிமுகவுக்கு பல ஆளுமைகள் தலைமை தாங்கினார்கள். யாராவது கூட்டணி வைக்க வேண்டுமென்றால் அந்த கூட்டணியை அவர்கள்தான் நாடி வருவார்கள். ஆனால், தற்போது அதிமுகவினர் டெல்லிக்கு சென்று கூட்டணி வைக்கிறார்கள். டெல்லிக்கு சென்று கூட்டணி அமைக்கும் பரிதாப நிலைக்கு அதிமுக வந்துள்ளது வேதனையானது. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கும். 2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றிபெறும்." என்று கார்த்தி சிதம்பரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மிஷன் தமிழ்நாடு 2026! பாஜகவின் சதுரங்கவேட்டை … மீண்டும் சென்னை வரும் அமித் ஷா..!
இதையும் படிங்க: வேலை வெட்டி இல்லாத சைதை துரைசாமி.. குழப்பம் ஏற்படுத்தி குளிர்காய்வதா..? கடுப்பாகும் அதிமுக நிர்வாகி..!