இரவில் நடந்த அதிரடி ரெய்டு... அள்ள அள்ள கட்டுக்கட்டாய் வந்த பணம்... ஆடிப்போன போலீஸ்...!
அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு திருச்சி நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவரின் கையில் இருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அந்தப் பையன் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்துள்ளது. ரயில்வே போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் பணம் எடுத்து வந்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை.
அவரிடம் சுமார் 75 லட்சத்திற்கு மேல் பணம் இருந்ததால் ரயில்வே போலீஸ் உடனடியாக திருச்சி வருமானவரித்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். அந்த நபரிடம் ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்ட போது, அவர் பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த வினேத்குமார் என்று கூறியுள்ளார். மேலும் தான் சோளவியாபாரம் செய்து வருவதாகவும், சோளம் விற்ற பணத்தை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.
இதையும் படிங்க: ‘டேய் என்னங்கடா’... தவெக தலைவர் விஜயை ஒருமையில் சாடிய சரத்குமார் - ஏன் தெரியுமா?
இந்நிலையில் திருச்சி வருமான வரிதுறை அலுவலர்கள் தற்பொழுது அரியலூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்து பிடிபட்ட வினோத்திடம் விசாரணை விசாரணையின் போது சரியான தகவல் சரியான பண பரிமாற்றத்திற்கான ரசீதுகள் இல்லாததால் ஹவாலா படம் என முடிவு செய்யப்பட்டுள்ளது இதில் 77 லட்சத்தி 11 ஆயிரத்து 640 பறிமுதல் செய்துள்ளனர்
இதையும் படிங்க: சீமான் ஒரு வக்கிரவாதி... காங்கிரஸ் எம். பி.சுதா கடும் தாக்கு!