அண்ணா பல்கலை. வழக்கில் கைதான ஞானசேகரன்.. விடுவிக்க கோரி மனுதாக்கல்..!
அண்ணா பல்கலை. வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தன்னை விடுவிக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞானசேகரன் என்பவரை கடந்தாண்டு டிசம்பர் மாதம் காவல்துறை கைது செய்தது. இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் நிலுவையில் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: ஞானசேகரன் மீது வேறு என்னென்ன வழக்குகள்..? விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!
ஞானசேகரனுக்கு எதிராக குற்றப் பத்திரிகையும் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளது. எனவே இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கூறி ஞானசேகரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் வழக்கு சென்னை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசரிக்கப்பட்டது.அப்போது ஞானசேகரன் நீதிபதி முன்பு ஆஜார் படுத்தபட்டார்.
இந்த மனு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஞானசேகரன் மீது வேறு என்னென்ன வழக்குகள்..? விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!