காமெடியன் குணால் கம்ராவுக்கு இடைக்கால ஜாமீன்.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு, இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.
மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு, இடைக்கால முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மஹாராஷ்டிராவில், நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவசேனாவை உடைத்து, பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானதை விமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க: மும்பையில் பேசிய பேச்சுக்கு சென்னையில் முன்ஜாமீன்.. காமெடியன் குணால் கம்ரா மனு இன்று விசாரணை..!
இதையடுத்து, குணால் கம்ரா மீது மும்பை காவல்துறை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் தனக்கு டிரான்சிட் முன் ஜாமீன் (வேறு மாநிலத்தில் பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்படும் மனு) கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குணால் மனு தாக்கல் செய்துள்ளார் .
அந்த மனுவில், விழுப்புரத்தில் வசித்து வருவதாகவும், மும்பை சென்றால் தன்னை போலீஸார் கைது செய்வார்கள் என்பதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி எஸ் சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரருக்கு மிரட்டல் விடுத்து 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதால் அவருக்கு டிரான்சிட் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என குணால் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, குணாலின் முன் ஜாமீன் மனுவுக்கு ஏப்ரல் 7ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை அவருக்கு இடைக்கால முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மும்பையில் பேசிய பேச்சுக்கு சென்னையில் முன்ஜாமீன்.. காமெடியன் குணால் கம்ரா மனு இன்று விசாரணை..!