பெண் டாக்டர் பலாத்கார கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை கோரி, சிபிஐ மேல்முறையீடு; மாநில அரசு மனுவுடன், 27ஆம் தேதி விசாரணை
பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை வழக்கு குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக மாற்றும் படி வலியுறுத்தி சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது.
மாநில அரசு தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவுடன் இந்த மனைவியும் சேர்த்து வருகிற 27ஆம் தேதி விசாரிப்பதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
கொல்கத்தா மருத்துவ மனையில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்ட தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் அனைவரும் எதிர்பார்த்தபடி, இந்த கொலை குற்றவாளி சஞ்சய் ராய்க்கு தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை. மாறாக சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கேரள விளையாட்டு வீராங்கனை பாலியல் பலாத்காரம்: 5 ஆண்டுகளாக தொடர்ந்த கொடூரம்: இதுவரை 57 பேர் கைது
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால் இந்த வழக்கில் உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்து வழக்கு தொடர வேண்டும் என்று டாக்டர்களும் மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் போலீஸ் தன்னார்வலர் பணியில் இருந்த இளைஞர் சஞ்சய் ராய் மட்டுமே சிபிஐ போலீசார் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. அவருக்கும் வெறும் ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது கொல்கத்தாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பை தொடர்ந்து மாநில அரசு சார்பில் தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது வழக்கு விசாரணையை நடத்திய சிபிஐ போலீசாரும் மேல்முறையீடு செய்து இருக்கிறார்கள்.
இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சஞ்சய் ராய்க்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை போதுமானதாக இல்லை என்று கூறி மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), உயர் நீதிமன்ற நீதிபதிகள், டெபாங்ஷூ பசாக் மற்றும் எம்டி ஷப்பர் ரஷிதி அடங்கிய அமர்வு முன்பு இன்று மேல் முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்தது.
இதற்கு பதில் அளித்த நீதிமன்ற அமர்வு, "இதே கோரிக்கையுடன் மாநில அரசும் மனு ஒன்றினைத் தக்கல் செய்துள்ளது, அதனுடன் சேர்த்து சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவும் வருகிற27-ம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" என்று தெரிவித்தது.
முன்னதாக மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்வது குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் குற்றவாளிகளை அவர்களுடைய வழக்குரைஞர்கள் மூலம் விசாரிப்பதாக கடந்த 22ஆம் தேதி அன்று கூறியிருந்தது.
அதே நேரத்தில் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதற்கான மாநில அரசின் உரிமைக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து. தங்கள் அமைப்புக்கு தான் மேல் முறையீட்டிற்கு முன்னுரை அளிக்க வேண்டும் என்றும் சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை வழக்குவிசாரணை கொல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் 81 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 50 பேரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த அக்டோபர் 7-ம் தேதி சிபிஐ தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 9-ம் தேதி அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி அனிபர் தாஸ் கடந்த 18-ம் தேதி தீர்ப்பினை வழங்கினார். அப்போது, சிபிஐ முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் ஜன. 20-ம் அறிவிக்கப்பட்டது.
அன்று "குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இதன்மூலம் அவர் தனது வாழ்வின் கடைசி நாள் வரை சிறையில் இருப்பார். மேலும் அவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது." என்று தீர்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை; சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை;"வாழ்வின் கடைசி நாள் வரை ஜெயிலில் இருக்கும்படி"அதிரடி உத்தரவு