×
 

எமனாகிய தலையணை..! நகைக்காக தாய், மகள் கொலை...!

தூத்துக்குடியில் தாய் மற்றும் மகளை கொலை செய்துவிட்டு 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேல நம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவரது மகள் ராமஜெயந்தி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீதாலட்சுமியின் கணவர் பூவன் இறந்து விட்டார். ராமஜெயந்தி தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக தாயாருடன் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் நீண்ட நேரமாக இவர்களது வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அறையை திறந்து பார்த்தபோது தாய் மற்றும் மகள் இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.

இதையும் படிங்க: தந்தையை இரும்பு ராடால் அடித்த மகன்... துடிதுடித்து இறந்ததை வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்!!

இதனிடையே தாய் மற்றும் மகள் இருவரையும் முகத்தில் தலையணையால் அமுக்கி மறுமணவர்கள் கொலை செய்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இருவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.

பின்னர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், விளாத்திகுளம் டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். 

இதையடுத்து இருவரது உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் மற்றும் மகளை தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: எங்க அம்மாவையா திட்டுற.. ஆத்திரத்தில் அப்பாவையே அடித்துக் கொன்ற இளைஞன்..சிக்கியது எப்படி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share