அண்ணாமலைக்கு சப்போர்ட்... திமுகவுக்கு எதிராக சீமான் சொன்ன அந்த வார்த்தை...!
அண்ணாமலை சொல்வது போல் அரசு பள்ளிகளைத் தவிர அனைத்து தனியார் பள்ளிகளிலும் இந்தி இருக்கிறது என்றால், அதற்கு அனுமதி கொடுத்தது யார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை சொல்வது போல் அரசு பள்ளிகளைத் தவிர அனைத்து தனியார் பள்ளிகளிலும் இந்தி இருக்கிறது என்றால், அதற்கு அனுமதி கொடுத்தது யார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பழனி செல்வதற்காக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசி அவர், அண்ணாமலை சொல்லும்போது 53,000 அரசு பள்ளிக்கூடம் தவிர அனைத்திலும் ஹந்தி உள்ளது. தனியார் பள்ளிகளில் ஹிந்தி உள்ளது என்றால் அதை அனுமதி கொடுத்தது யார் என்று கேள்வி எழுகிறது.
திமுக தற்போது தேர்தல் வரும் போது இந்திய எதிர்க்கிறோம் என சொல்வது தமிழ் மீது பற்று உள்ளது போல் காட்டிக் கொள்வதற்காக. இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு இந்த நாட்டில் உள்ள 22 மொழிகளும் ஆட்சி மொழியாக அதிகார மொழியாக இருந்திருக்க வேண்டும். அது இல்லாமல் ஹந்தி தான் இந்தியாவின் மொழி என்றால் என் மொழி என்ன ஆச்சு.
இதையும் படிங்க: காளியம்மாள் விலகல்..? தங்கச்சிக்கு அண்ணன் சீமான் கொடுத்த 2 வாய்ப்பு..!
மும்மொழியில் என் மொழி எங்கு இருக்கிறது. தமிழ் படிப்பதற்கே வாய்ப்பு இல்லாத சூழ்நிலை இருக்கும் போது புதிதாக ஒரு மொழி கற்றுக் கொள்ள வேண்டும்..
இந்த கேள்வி அனைத்து மாநில மொழி பேசுபவர்களுக்கும் வரும். அதனால் எல்லா மொழியும் ஆட்சி மொழியாக ஆட்சி வேண்டும்.
ஒற்றை மொழியை திணித்து இந்த நாட்டின் இறையாண்மை ஒற்றுமையை கூறு போடுகிறீர்கள் என குற்றம் சாட்டுகிறேன். விஜயலட்சுமி வழக்கில் நீதிபதி அவர்களது கருத்தை தெரிவித்துள்ளார் விசாரணையில் அது குறித்து முழுமையாக தெரியவரும்..
முதல்வர் வரி செலுத்துவதை நிறுத்தி விடுவோம் ஒரு நொடியில் என கூறியதற்கு அது எந்த நொடி என மீண்டும் சீமான் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கயல்விழிக்கு ரூட் கிளியர்… நாதக-வில் காளியம்மாள் விலகல்..? திமுக- அதிமுகவுக்கு தம்பிகள் எச்சரிக்கை..!