வேளாண்துறையில் இவ்வளவு புதிய திட்டங்களா?.. அடடா...!!
இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பிலான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அவற்றில் முக்கியமான அறிவிப்புகளை குறிப்புகளாக பார்க்கலாம்..
நெல் சாகுபடி பரப்பினை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திட நெல் சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
இதையும் படிங்க: தமிழக சட்டப்பேரவையில் இனி விவாதங்கள் தான்.. பதில் அளிக்கப்போகும் அமைச்சர்கள்..!
மானாவரி நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்திட 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்யப்படும். இதற்காக 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் வேளாண் பட்டயதாரர்கள் மூலம், "முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் " அமைக்கப்படும். இதற்கு 42 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
சிறுதானிய பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க "தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்". இதற்காக 52 கோடியே 44 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துக்கள் இயக்கம் உருவாக்கப்படும். அதற்காக 108 கோடியே 6 லட்சம் ஒதுக்கீடு.
மக்காளச்சோள சாகுபடி பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க மக்காளச்சோள மேம்பாட்டு உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 40 கோடியே 27 லட்ச ரூபாய் ஒதுக்கீடு.
269 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் உள்ள 2,338 கிராம ஊராட்சிகளில், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.
142 கோடி மதிப்பீட்டில் மண்வளத்தினை மேம்படுத்திட முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர்க் காப்போம் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மலைவாழ் உழவர்கள் பயன்பெறும் வகையில் மலைவாழ் உழவர்கள் முன்னேற்றத்திட்டம் என்ற புதிய திட்டம் கொண்டுவரப்படும்.
உயிர்ம விளைபொருட்களில் எஞ்சிய நஞ்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்திற்கு உழவர்களுக்கு முழு மானியம் வழங்கப்படும்.
உயிர்ம விவசாயிகளுக்கு இலவச உயிர்ம வாய்ப்புச் சான்றிதழும், ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.
இயற்கை வேளாண்மையை பரவலாக்கம் செய்திட 12 கோடி ரூபாயில் இயற்கை வேளாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஆதி திராவிட, பழங்குடியினத்தை சேர்ந்த சிறுகுறு விவசாயிகளின் பொருளாதாரச் சுமையினை குறைத்திட 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
உயர்விளைச்சல் தரக்கூடிய இரகங்களின் சான்று விதைகள் 39,500 மெட்ரிக் டன் அளவுக்கு விநியோகம் செய்யப்படும்.
250 கோடி ரூபாயில், உழவர்களின் நிலங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து விதைகள் கொள்முதல் செய்யப்படும்.
15.05 கோடியில் 7 புதிய அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும்.
இதையும் படிங்க: விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படுமா...? காத்திருக்கும் விவசாயிகள்..!