12 வயது சிறுவர்களுடன் செ***ஸ்.. 35 வயது நல்லாசிரியையின் லீலைகள்.. 30 வருட ஜெயில் தண்டனை
12 வயது சிறுவர்களுடன் 35 வயது 'நல்லாசிரியை'யின் 'செ**ஸ் லீலை'கள்; குற்றத்தை ஒப்புக்கொண்டதால், 30 ஆண்டுகள் சிறை தண்டனை
நல்லாசிரியை விருது பெற்ற 35 வயது பள்ளிக்கூட ஆசிரியை ஒருவர், 12 வயது சிறுவர்களுடன் செ**ஸ் லீலையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். கதறி அழுதபடி, வீங்கிய கண்களுடன், குற்றத்தை அவர் ஒப்பு கொண்டதால், 30 ஆண்டுகள் வரை அவருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தான் இது போன்ற ஆசிரியர் மாணவர் பாலியல் குற்றப் புகார்கள் அவ்வப்போது அரங்கேறி வந்தாலும், அமெரிக்கா போன்ற முன்னேறிய வெளிநாடுகளிலும் இதே போன்ற அவலங்கள் தொடர்வது வியப்பை அளிக்கிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆசிரியை பெயர், ஜாக்குலின் மா. 35 வயதான அவர் தன்னிடம் படித்து வந்த 11 மற்றும் 12 வயது மாணவர்களுடன் ஆபாச படங்களை காட்டி பாலியல் உறவில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: சிறு நீரில் குளியல்... ஷாக் ட்ரீட்மெண்ட்.. சித்திரவதை... ஆன்மாவை உலுக்கும் அமெரிக்காவிலிருந்து திரும்பியவரின் கதை..!
அவர்களில் ஒரு மாணவனின் பெற்றோர் 2023 ஆம் ஆண்டு இது குறித்து போலீசாரிடம் புகார் செய்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அடுத்த நாளே, இதே போல் மற்றொரு மாணவனிடமும், ஜாக்குலின் மா தகாத பாலியல் தொடர்பில் இருந்ததாக மற்றொரு புகாரும் வந்தது. அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இதில் வேதனை தரும் தகவல் என்னவென்றால், அதற்கு 7 மாதங்களுக்கு முன்புதான், சாந்தியாகோ மாவட்ட அளவில் ஐந்து ஆசிரியர்கள் அந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற்றிருந்தனர். அவர்களில் இந்த ஜாக்குலின் மா வும் ஒருவர் என்பதுதான் அந்த தகவல். இந்த வழக்கு விசாரணையின் போது அந்த ஆசிரியை கதறி அழுதபடி, வீங்கிய கண்களுடன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று மாவட்ட அரசு வழக்குரைஞர் தெரிவித்ததாக, "டெய்லி ஸ்டார்" ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
விசாரணையின் போது இந்த வழக்கில் துப்பறிந்த அதிகாரிகள் ஆசிரியருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றத்தை சத்தமாக வாசித்தனர். பாதிக்கப்பட்ட ஒரு மாணவனிடமிருந்து ஆசிரியருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அந்தக் கடிதத்தில், "சில நேரங்களில் நான் இன்னும் ஒரு குழந்தை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இதுதான் எனது ஒரே உண்மையான உறவு" என்று எழுதப்பட்டிருந்ததும் விசாரணையின் போது வாசித்து காண்பிக்கப்பட்டது.
விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால், இந்த வழக்கில் அவருக்கு 30 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர். "அவர் விருது பெற்ற நல்லாசிரியரா.. என்பது முக்கியமல்ல; தனது கண்ணியமான பதவியை பயன்படுத்திக் கொண்டு அவர் மீது நம்பிக்கை நல்லெண்ணம் வைத்திருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விரோதமாக இது போன்ற பொருத்தமற்ற தவறான தொடர்புகளுக்கு அந்த பதின்ம வயது மாணவர்களை கட்டாயப்படுத்தியதாக" ஜாக்குலின் மா மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா செல்ல எச்1பி விசாவை 73 % பெற்ற இந்தியர்கள்: மத்திய அரசு தகவல்