×
 

முறையாக தகவல் சொல்ல அரசுக்கு என்ன தயக்கம்? TNPSC குரூப் 4 விவகாரத்தை கையில் எடுத்த அன்புமணி!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து துறை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்னும் வழங்காதது ஏன் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு துறைகளில் உள்ள கிராம நிரவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆவின் ஆய்வக உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்டது. ஆனால் போக்குவரத்து துறை இளநிலை உதவியாளர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பேசிய அன்புமணி ராமதாஸ், குரூப் 4 போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆடைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து துறைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வேலைக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்றுவரை நியமன ஆணைகளை வழங்காமல் தேர்தலை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது நியாயம் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 

இதையும் படிங்க: அனுமதி இல்லாத படிப்பை தொடங்கும் பெரியார் பல்கலை., தடுத்து நிறுத்த அன்புமணி வலியுறுத்தல்..!

எழுத்து தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களை இளநிலை உதவியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, அனைத்து சான்றிதழ்களையும் தாக்கல் செய்தவர்களுக்கு துறைகள் வாயிலாகவும், மாவட்ட ஆட்சியர் வாயிலாகவும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

ஆனால், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை என்றும் தங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா அல்லது பறிக்கப்படுமா என்பது தெரியாமல் அவர்கள் தவித்து வருவதாகவும் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 அரசு காலம் தாழ்த்துவது ஏன்? காலதாமதம் பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்படி தெரிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம் என கேள்வி எழுப்பிய அவர், அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு, அதை நனவாக்குவது தான் அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சிதைப்பதாக இருக்கக் கூடாது என சாடியுள்ளார்.

எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போக்குவரத்துத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: பாமக எடுத்த திடீர் முடிவு! - பேரதிர்ச்சியில் தமிழக அரசியல் களம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share