×
 

இந்தியை திணிப்பதே திமுக தான்... அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!!

இந்தித் திணிப்பு நடப்பதே, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல மொழிகள் கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தவிர, முதலமைச்சர் திரு.முக ஸ்டாலின் கூறுவது போல இந்தித் திணிப்பு அல்ல. இந்தித் திணிப்பு நடப்பதே, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்துக்கு உரிய நிதியை தராவிட்டாலும் இனமானத்தை அடகு வைக்கும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அண்ணாமலை அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுக்குறித்து தமிழக சட்டப்பேரவையிலும் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடயே தமிழக சட்டப்பேரவையில் முன்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது, இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும் பணமே வேண்டாம் என தாய் மொழியை காப்போம் என உறுதியாக உள்ளோம்.

இன்னொரு மொழியை திணிக்க அனுமதித்தால் அது நம் மொழியை மென்று தின்று விடும். இந்தி மொழி திணிப்பு மூலம் ஒரு இனத்தை ஆதிக்கம் செய்ய நினைக்கிறார்கள். மாநில உரிமையை நிலை நாட்டுவதற்கு தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளிவிடுவேன். மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமையை நிலை நாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தித் திணிப்பு நடப்பதே, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இப்தார் நோன்பு திறப்பா..? பாஜக கூட்டணி அறிவிப்பா..?

இதுதொடர்பான அவரது எக்ஸ் பதிவில், தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்பது, தமிழகம் முழுவதும், முதலமைச்சர் குடும்பம் உட்பட திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தவிர, முதலமைச்சர் திரு.முக ஸ்டாலின் கூறுவது போல இந்தித் திணிப்பு அல்ல. இந்தித் திணிப்பு நடப்பதே, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான்.

இந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில், இந்தித் திணிப்பு என்று மீண்டும் கூறியிருக்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின் மும் மொழிக் கல்வியை இந்தித் திணிப்பு என்று திரித்துக் கூறுவதன் மூலம், பணமிருப்பவர்கள் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்ற திமுகவின் மறைமுகக் கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் அவர். இது தவிர, பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில், மொழி வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, கடந்த 2024 - 25 நிதியாண்டில் ரூ. 11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், 2025 - 26 நிதியாண்டிற்கு, ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடி செலவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. திமுக அரசு, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கும் என்ன செலவு செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து, முதலமைச்சர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

இதையும் படிங்க: ஜாமீன் கிடைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய செந்தில் பாலாஜி.. முதல்வர் ஸ்டாலினை குடையும் அண்ணாமலை.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share